Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதாவை காப்பகத்தில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்வேதா பாசுவை விடுதலை செய்ய ஹைதராபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக கைதானவர் சுவேதா பாசு. தேசிய விருது பெற்ற 23 வயது நடிகையான சுவேதா பாசு, தமிழில் கருணாசுக்கு ஜோடியாக சந்தாமாமா திரைப்படத்திலும் நடித்தவர். எனவே தேசிய அளவில் இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஸ்வேதா பாசுவை, மகளிர் காப்பகத்தில் அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி தொடர்ந்து காப்பகத்தில் இருந்தார்.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணை ஹைதராபாத், நாம்பல்லே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு கருத்தை கேட்ட நீதிமன்றம், ஸ்வேதா பாசுவை உடனடியாக காப்பகத்தில் இருந்து ரிலீஸ் செய்ய உத்தரவிட்டுள்ளது. இன்று இரவே அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.