Don't Miss!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நீங்கள் தான் உண்மையான ஹீரோ.. தெலுங்கானா போலீஸுக்கு நயன்தாரா பாராட்டு!
சென்னை: சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை என்ற கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களாக தெலுங்கான காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள் என்று நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த மாதம் தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என பலரும் போராடி வந்த நிலையில், குற்றவாளிகள் நாலு பேரையும் தெலுங்கானா காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை பாராட்டி நடிகை நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை என்ற கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களாக தெலுங்கான காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள்.
சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை என்ற கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களாக தெலுங்கான காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை இந்த நடவடிக்கை என்பது சரியாக வழங்கப்பட்ட நீதி, இதுவே நியாயமான மனித மிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன்.
நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல் அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயம் தரும். மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும்.
நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம், நம் குழந்தைகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும்.பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர் கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியதும் நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும். இதுவரை
எந்த நடிகையும் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில் துணிச்சலான நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருப்பதை பலரும் பாராட்டி உள்ளனர்.