Don't Miss!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- News நன்றி மறந்த நடிகர் சிரஞ்சீவி? ஆந்திராவில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு.. காங்கிரசுக்கு ஷாக்
- Finance முகேஷ் அம்பானி ஸ்டிரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டிக்கெட் கட்டணம் உயர்வு... டல்லடித்த திரையரங்குகள்!
டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டதால், நேற்று திரையரங்குகளில் கூட்டம் கணிசமாகக் குறைந்துவிட்டது.
ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பிறகு சினிமா தியேட்டர்களில் கட்டணங்கள் நேற்று முதல் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி மால்களில் உள்ள திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ 200 வரை வசூலிக்கின்றனர். பார்க்கிங் கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என நிர்ணயித்துள்ளனர். அதுவே ரூ 150 வரை போகிறது.
ஒரு தனி நபர் படம் பார்க்க குறைந்தது ரூ 500 தேவை என்று ஆகிவிட்டது. மேலும் தின்பண்டங்களின் விலையும் தாறு மாறாக உயர்த்தப்பட்டுள்ளது. திரையரங்குகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை மக்கள் தலையில் இறக்கி வைத்துள்ளனர்.
இதனால் தியேட்டர்களில் கணிசமாக கூட்டம் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் தியேட்டர்களுக்கு கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்றுபல அரங்குகள் வெறிச்சோடின. ஸ்பைடர்மேன் படம் வெளியாகியுள்ள சில அரங்குகளில் மட்டும் கூட்டம் நிறைந்திருந்தது. ஆனால் அவர்களும் டிக்கெட் விலை உயர்வுக்கு கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தனர். மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் கூட மக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.