Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் ஒரு பெண்சிங்கம்.. கர்ஜித்து என் குழந்தைகளை காப்பேன்.. அட்வைஸ் செய்பவர்களுக்கு வனிதா வார்னிங்!
சென்னை: இயற்கையிலேயே தான் ஒரு பெண் சிங்கம் என்றும் கர்ஜித் தன் குழந்தைகளை பாதுகாப்பேன் என்றும் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா கடந்த 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லாக்டவுன் என்பதால் வீட்டிலேயே எளிமையாக அவர்களின் திருமணம் நடைபெற்றது.
இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். அவரது திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடு.. அட்வைஸ் செய்த குட்டி பத்மினி.. விளாசிவிட்ட வனிதா அக்கா!
ஏமாந்துவிட்டாரா?
பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவர், தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். வனிதா ஏமாந்துவிட்டாரா என கருத்து தெரிவித்து வந்தனர்.
வேலைய பாருங்க
நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணனும், வனிதா சட்டப்படி விவாகரத்து ஆகாத ஒருவரை எப்படி திருமணம் செய்தார் என கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் கடுப்பான வனிதா உங்க வேலைய மட்டும் பாருங்க. அடுத்தவர் குடும்ப விஷயங்களில் அவர்களின் அனுமதி இல்லாமல் பேசாதீர்கள் என்றும் இது உங்கள் டிவி நிகழ்ச்சி இல்லை என்றார்.
டிவிட்ஸ் நீக்கம்
இதனை தொடர்ந்து பலரும் வனிதாவின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்தனர். ஊடகங்களும் மோதல் என செய்தி வெளியிட்டன. வனிதாவும் தொடர்ந்து சாடி வந்ததால், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தான் பதிவிட்ட டிவிட்டுகளை எல்லாம் நீக்கினார்.
மன்னித்துவிடுங்கள்
அதோடு தான் அந்த விஷயத்தில் கருத்து சொல்லியிருக்கக்கூடாது என வனிதாவிடம் மன்னிப்பு கோரினார். ங்கள் சொன்னது போல், ஏழை குழந்தை பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் எழுப்புவதற்கான எனது அசல் ‘கடமையை'செய்வேன் என கும்பிடு போட்டு சென்றார்.
கவலைப்பட வேண்டாம்
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில் அப்படி வெளியான செய்தி ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வனிதா, என்னைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்பதை போல டிவிட்டியிருக்கிறார்.
பெண் சிங்கம்
அவர் டிவிட்டிருப்பதாவது, ஒரு தாயாக என் வாழ்க்கை மற்றும் திறனைப் பற்றி அக்கறை கொண்ட உங்கள் அனைவருக்கும்.. நான் இயற்கையிலேயே ஒரு பெண் சிங்கம், என் குழந்தைகளை கர்ஜித்து பாதுகாப்பேன்... என எச்சரிக்கும் வகையில் டிவிட்டியிருக்கிறார்.
தந்திரமான நரி
ஆனால் அவரது இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை வாய்க்கு வந்தப்படி கழுவி ஊற்றியுள்ளனர். என்னது நீங்கள் பெண் சிங்கமா.. புலி தோள் போர்த்திய தந்திரமான நரி, உங்கள் சந்தோஷத்திற்காக மக்களை எப்படி சுரண்டுவது என்று உங்களுக்கு தெரியும் என விளாசியிருக்கின்றனர்.