Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'நான் நல்லாருக்கேன்'... திருவண்ணாமலையில் இளையராஜா கிரிவலம்- அண்ணாமலையார் தரிசனம்!
திருவண்ணாமலை: இசைஞானி இளையராஜா மருத்துவ சிகிச்சைக்கு பின் முதல்முறையாக திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு கிரிவலம் வந்தார்.
இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
மலேசிய நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது உடல் நிலை பாதிக்கப்படவே உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளையராஜாவுக்கு மருத்துவர்கள் உடனடியாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தனர். அதன்பின் சில நாட்கள் கழித்து உடல் நலம் பெற்று வீடு திரும்பினார். திரைப்படத்திற்கு இசையமைக்கும் பணியிலும் ஈடுபட்டார்.
திருவண்ணாமலையில் இசைஞானி
இந்நிலையில், வியாழக்கிழமையன்று காலை திருவண்ணாமலைக்கு வந்த இளையராஜா, அங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
நலமுடன் இருக்கிறேன்
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கூறியதாவது. இப்போது நான் நலமுடன் உள்ளேன். ''நான் அண்ணாமலையார் கோயிலுக்கு அடிக்கடி வருபவன். புத்தாண்டுக்கு தவறாமல் இங்கு வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு கிரிவலம் வருவது வழக்கம்.
திருவண்ணாமலை கிரிவலம்
இந்த புத்தாண்டு அன்று வரமுடியாமல்போனதால் இன்று கிரிவலம் வர வந்துள்ளேன். நான் அமிதாபச்சன் நடிக்கும் படம் ஒன்றுக்கு இசை அமைக்க உள்ளதால் கிரிவலம் சென்றுவிட்டு சென்னை திரும்ப உள்ளேன்" என்றார்.
ரசிகர்கள் திரண்டனர்
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் இளையராஜா முதன்முறையாக திருவண்ணாமலை சென்றதால் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?