Don't Miss!
- Sports ராசியே கிடையாது.. ருதுராஜ் சதமடித்தால் சிஎஸ்கே தோல்வி உறுதி.. இப்படி நடப்பது 2வது முறையாம்!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நான் நல்லாருக்கேன்'... திருவண்ணாமலையில் இளையராஜா கிரிவலம்- அண்ணாமலையார் தரிசனம்!
திருவண்ணாமலை: இசைஞானி இளையராஜா மருத்துவ சிகிச்சைக்கு பின் முதல்முறையாக திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு கிரிவலம் வந்தார்.
இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
மலேசிய நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது உடல் நிலை பாதிக்கப்படவே உடனடியாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளையராஜாவுக்கு மருத்துவர்கள் உடனடியாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்தனர். அதன்பின் சில நாட்கள் கழித்து உடல் நலம் பெற்று வீடு திரும்பினார். திரைப்படத்திற்கு இசையமைக்கும் பணியிலும் ஈடுபட்டார்.
திருவண்ணாமலையில் இசைஞானி
இந்நிலையில், வியாழக்கிழமையன்று காலை திருவண்ணாமலைக்கு வந்த இளையராஜா, அங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
நலமுடன் இருக்கிறேன்
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கூறியதாவது. இப்போது நான் நலமுடன் உள்ளேன். ''நான் அண்ணாமலையார் கோயிலுக்கு அடிக்கடி வருபவன். புத்தாண்டுக்கு தவறாமல் இங்கு வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு கிரிவலம் வருவது வழக்கம்.
திருவண்ணாமலை கிரிவலம்
இந்த புத்தாண்டு அன்று வரமுடியாமல்போனதால் இன்று கிரிவலம் வர வந்துள்ளேன். நான் அமிதாபச்சன் நடிக்கும் படம் ஒன்றுக்கு இசை அமைக்க உள்ளதால் கிரிவலம் சென்றுவிட்டு சென்னை திரும்ப உள்ளேன்" என்றார்.
ரசிகர்கள் திரண்டனர்
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் இளையராஜா முதன்முறையாக திருவண்ணாமலை சென்றதால் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.