twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் பேசியதைக்கேட்டு எனது இதயத்தில் ரத்தம் கசிகிறது- தனுஷ்

    By Mayura Akilan
    |

    Danush
    சென்னை: கமல்ஹாசன் இந்திய சினிமாவின் மாபெரும் மனிதர். அவரது பேச்சைக்கேட்டு எனது இதயத்தில் ரத்தம் கசிகிறது. இதற்கு மேல் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் தனுஷ்.

    நடிகர் தனுஷும், அவரது மனைவி இயக்குநர் ஐஸ்வர்யாவும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் விவகாரம் மற்றும் கமல்ஹாசனின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஐஸ்வர்யா கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷடமானது . மிகவும் கஷ்டமாக உள்ளது. நாங்கள் சாரைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது பேச்சால் அதிர்ந்து போயுள்ளோம். சினிமாவுக்காகவே வாழ்பவர் கமல் சார். அவரது படம் ரசிகர்களைப் போய்ச் சேர வேண்டும், யாருக்காக எடுத்தாரோ அவர்களிடம் அது போக வேண்டும். திரைக்குப் போய்ச் சேர வேண்டும்.

    கமல் சாருக்கு நீதி கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவரின் ஆதரவும் கமல் சாருக்கு உண்டு என்றார் ஐஸ்வர்யா.

    தனுஷ் கூறுகையில், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 50 வருடமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சந்தோஷப்படுத்தி ரசித்து வருபவர் கமல் சார். அவரது பேச்சைக் கேட்டு எனக்கு இதயத்தில் ரத்தம் கசிந்தது. இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார் தனுஷ்.

    English summary
    Actor Danush and his wife director Aishwarya have expressed shock and pain over Kamal Haasan's speech on his Viswaroopam movie issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X