Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கமல் பேசியதைக்கேட்டு எனது இதயத்தில் ரத்தம் கசிகிறது- தனுஷ்
நடிகர் தனுஷும், அவரது மனைவி இயக்குநர் ஐஸ்வர்யாவும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் விவகாரம் மற்றும் கமல்ஹாசனின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐஸ்வர்யா கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷடமானது . மிகவும் கஷ்டமாக உள்ளது. நாங்கள் சாரைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது பேச்சால் அதிர்ந்து போயுள்ளோம். சினிமாவுக்காகவே வாழ்பவர் கமல் சார். அவரது படம் ரசிகர்களைப் போய்ச் சேர வேண்டும், யாருக்காக எடுத்தாரோ அவர்களிடம் அது போக வேண்டும். திரைக்குப் போய்ச் சேர வேண்டும்.
கமல் சாருக்கு நீதி கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவரின் ஆதரவும் கமல் சாருக்கு உண்டு என்றார் ஐஸ்வர்யா.
தனுஷ் கூறுகையில், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 50 வருடமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சந்தோஷப்படுத்தி ரசித்து வருபவர் கமல் சார். அவரது பேச்சைக் கேட்டு எனக்கு இதயத்தில் ரத்தம் கசிந்தது. இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார் தனுஷ்.