Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னை அப்படி நினைச்சிடாதீங்க..நான் ஒன்னும் அந்த மாதிரி பெண் இல்லை..சொல்கிறார் பிரபல ஹீரோயின்!
மும்பை: நான் அந்த மாதிரியான நடிகை அல்லை, சாகசங்களை நிஜமாகவே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் பிரபல நடிகை.
தமிழில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர் அடா சர்மா.
சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அங்கிதா போல் தன்னை யாரும் காதலிக்கவில்லை.. அடிக்கடி உடைந்துபோன சுஷாந்த்.. மருத்துவரின் திடுக் தகவல்!
சவாலானது
தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ள இவர், இந்தியில் 1920, பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது, மேன் டு மேன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் பெண்ணாக இருந்து அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய கேரக்டரில் நடிக்கிறார். ஆணாக நடிப்பதற்கு சில பயிற்சிகளை எடுத்துள்ளார் அடா சர்மா.
பெண்ணாக மாறியவர்
அந்தப் படம் பற்றி பேசும்போது, இது ரொமான்டிக் காமெடி படம். ஒருவர், ஒரு பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். பிறகு திருமணம் செய்துகொள்கிறார். பிறகுதான் தெரிகிறது, அந்தப் பெண், ஆணாக இருந்து ஆபரேஷன் மூலம் பெண்ணாக மாறியவர் என்று. இதனால் நடக்கும் பிரச்னைகளும் குழப்பங்களும்தான் கதை. அபிர் சென்குப்தா இயக்குகிறார்' என்று தெரிவித்திருந்தார்.
போலீஸ் அதிகாரி
இந்நிலையில், நான் சாகசங்களைச் செய்கிற பெண் என்று தெரிவித்துள்ளார் அடா சர்மா. அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியில் என் முதல் படம் 1920. முதல் படத்திலேயே கருப்பு பற்களுடன் கோரமாகவும், அலங்கோலமான முடியுடனும் கொடூரமாக அலறியபடியும் நடித்தேன். இதுபோன்ற ரிஸ்க்கான சவால்கள் எனக்குப் பிடிக்கும். அதை விரும்புகிறேன்.
பாவனா ரெட்டி
'காமாண்டோ 2' படத்தில் வித்யூத் ஜாம்வாலுடன் நடித்தேன். இது ஆக்ஷன் படம். நான் பாவனா ரெட்டி என்ற கேரக்டரில் போலீஸ் அதிகாரியாக நடித்தேன். அதில் எனக்கு சாதாரணமான கேரக்டர் அல்ல. தெலுங்கு ஸ்டைலில் இந்தி மொழியை பேசி நடிக்க வேண்டும். இது எனக்கு சவாலாக ஒன்று. அதை சரியாகவே செய்தேன்.
போராடுகிறேன்
அதற்காகக் கடுமையாகப் பயிற்சி பெற்றேன். கமாண்டோ 3 படத்திலும் அந்த கேரக்டரை தொடர்ந்தேன். ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடிக்க, நிறைய விஷயங்கள் வேண்டும். என்னிடம் அது இருக்கிறது. நான் துன்பத்தில் இருக்கும் பெண் அல்ல. உண்மையில் எதிர்த்து போராடுகிறேன். எல்லா சாகசங்களையும் நிஜமாகவே செய்கிறேன்.
நிரூபித்திருக்கிறேன்
அதனால் ஆக்ஷன் படங்களில் நடிப்பது நன்றாக இருக்கிறது. ஒரே கேரக்டரில் நடித்தாலும் ஆக்ஷனிலும் நடிப்பிலும் என்னால் வித்தியாசத்தை காண்பிக்க முடியும். இதை, நான் நடித்துள்ள படங்களில் நிரூபித்திருக்கிறேன். அடுத்து நடிக்க இருக்கிற மேன் டு மேன் படமும் எனக்கு சவாலானதுதான். இவ்வாறு கூறி உள்ளார் அடா சர்மா.