Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தலைவன் இருக்கின்றான் படத்தில் நான் இல்லை.. போட்டுடைத்த நடிகர் விஜய் சேதுபதி!
சென்னை: தலைவன் இருக்கின்றான் படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி இதுவரை நடிகர் கமலுடன் சேர்ந்து நடிக்கவில்லை.
இதனால் கமல் 60 நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் சேதுபதி இந்தியன் 2 படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை சில காரணங்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் ஒரு படத்திலாவது சேர்ந்து நடிக்க வேண்டும் என்று கமலிடம் வாய்ப்பு கேட்டார்.
கரண் ஜோகர் படத்தை நிராகரித்தார் விஜய் தேவரகொண்டா .. காரணம் இது தான் !
தலைவன் இருக்கின்றான்
இதனை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி நாசரின் மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
தவறவிட்டேன்
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய் சேதுபதி, தற்போது வரை கமலுடன் தான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, "நான் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருந்தேன், ஆனால் தேதிகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நான் அதைத் தவறவிட்டேன்,
வெறித்தனமாக விரும்புகிறேன்
இப்போது வரை நான் அவருடன் எந்தப் படமும் நடிக்கவில்லை, ஆனால் அவருடன் நடிக்க வேண்டும் என்று நான் வெறித்தனமாக விரும்புகிறேன், அது படத்தில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் என்றாலும் கூட பரவாயில்லை.
நான் நம்புகிறேன்
அது எப்போதாவதோ அல்லது மற்றொரு படத்திலோ நடக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் உண்மையிலேயே ஏதாவது ஒன்றை விரும்பினால், அது எப்படியாவது நடக்கும் என்று நான் நம்புகிறேன்.. இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
19 ஆண்டுகளுக்கு பிறகு
தலைவன் இருக்கின்றான் படத்தை லைகா புரடெக்ஷன் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். தெனாலி படத்திற்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து தலைவன் இருக்கின்றான் படத்தின் மூலம் ஏஆர் ரஹ்மானும் கமல்ஹாசனும் இந்த படத்தின் மூலம் இணையவுள்ளனர்.