Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முக்கிய கதாப்பாத்திரங்களில் தான் நடிப்பேன் என்றில்லை.. வயசும் ஒரு மேட்டர் இல்லை.. நடிகை அசால்ட்!
Recommended Video
சென்னை: முக்கியமான கதாப்பாத்திரங்களில் தான் நடிப்பேன் என்றில்லை என டிவி தொகுப்பாளினியும் நடிகையுமான ரம்யா தெரிவித்துள்ளார்.
டிவி தொகுப்பாளினியான நடிகை ரம்யா மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரம்யாவின் நடிப்பு பேசப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.
கேம் ஓவர், அமலா பாலுடன் ஆடை ஆகிய படங்களில் நடித்தார் ரம்யா. ஆடை படத்திலும் ரம்யாவின் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்தது. ஆடை படத்தில் ரம்யாவுக்கு அமலா பால் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த காட்சி பெரிதும் பேசப்பட்டது.
மக்கள் வரவேற்பு
இந்நிலையில் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகை ரம்யா, தற்போதுதான் நடிப்பு கேரியரை தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார். மக்கள் தங்களின் அன்பின் மூலம் தனக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆடை படம்
மேலும் கேம் ஓவர் மற்றும் ஆடை படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை ரம்யா. தான் தொகுப்பாளராக பிஸியாக இருந்த போது தனக்கு பட வாய்ப்புகள் வந்தன என்றும் அப்போது தனக்கு சினிமா மீது பெரிதாக ஆர்வம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தட்டி எழுப்பினார்
சில படங்களில் நட்புக்காக நடித்திருக்கிறேன். அதெல்லாம் நானே விரும்பி நடித்தேன். தற்போது முழு மூச்சாக படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். மணிரத்னம் சார்தான் என்னுள் கிடந்த நடிகையை தட்டி எழுப்பினார். ஓ காதல் கண்மணி வரை நான் நடித்ததே இல்லை.
பொழுதுபோக்கு அம்சங்கள்
நான் பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நடித்துள்ளபோதும் இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்க நான் விரும்பவில்லை. வெகுஜன பொழுதுபோக்கு அம்சங்களில் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புகிறேன். என்னால் பல மாதிரியான படங்களில் நடிக்க முடியும்.
வயசு ஒரு மேட்டரே இல்லை
ஒரு பாதையில் மட்டும் செல்ல விரும்பவில்லை. அதேபோல் ஒன்றும் இல்லாத ரோல்களை செய்யவும் விரும்பவில்லை. இன்றைய கால கட்டத்தில் சினிமாவில் வயது மற்றும் திருமணம் ஒரு தடையில்லை. சமந்தா திருமணத்திற்கு பிறகு நடித்த படம் தான் 100 கோடி வசூலை பெற்றுள்ளது.
அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள்
இன்னமும் நயன்தாராவும் திரிஷாவும் அருமையான படங்களை கொடுத்து வருகின்றனர். கதையை பொறுத்துதான் எல்லாமும். முன்னணி கதாபாத்திரங்கள் அல்லது இந்த கதாபாத்திரங்களில் தான் நடிப்பேன் என்றில்லை. அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன் இவ்வாறு நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.