Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்ல.. விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கில்ல: டென்ஷனான சுசி!
அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கில்லை என இயக்குநர் சுசீந்திரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் தனக்கில்லை என இயக்குநர் சுசீந்திரன் விளக்கமளித்துள்ளார்.
சசிக்குமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையால் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இயக்குநர் அமீர், சுசீந்திரன், எஸ் பி.ஜனநாதன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். சினிமாத்துறையில் வேர் ஊன்றியுள்ள கந்துவட்டி ஆதிக்கத்தை தயாரிப்பாளர் சங்கம் தடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சுசீந்திரன் பகீர் தகவல்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சுசீந்திரன், நடிகர் அஜித் நான் கடவுள் படம் வந்த பீரியடில் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டார் என கூறினார். மேலும் இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோரும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அன்புக்கு எதிராக கொந்தளிப்பு
இதையடுத்து அன்புச்செழியனுக்கு எதிராக அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொந்தளித்தனர். அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
|
ஏன் விளம்பரம் தேடுகிறீர்கள்?
இந்நிலையில் வெயில் என்ற பெயரில் ரசிகர் ஒருவர் சுசீந்திரனை டிவிட்டரில் வாரியுள்ளார். அதாவது, அப்போது எல்லாம் பேசாம இப்போது ஏன் பேசுகிறீர்கள்? அன்பிடம் கடன் வாங்கி உள்ளீர்களா? அஜித்தை வைத்து ஏன் விளம்பரம் தேடுகிறீர்கள் என கேட்டுள்ளார்.
— Suseenthiran (@dir_susee) November 22, 2017 |
டென்ஷனான சுசீந்திரன்
இதனால் டென்ஷனான சுசீந்திரன், அன்புச்செழியன் மட்டுமில்லை எவர்கிட்டயும் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. அஜீத்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அன்புச்செழியன் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம் என்றும் சுசீந்திரன் கூறியுள்ளார்.