Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விருதுகளுக்காக படம் இயக்குவதில்லை: தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன்
சென்னை: 2019ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் அசுரன்.
இந்த படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!
இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார், கலைப்புலி S. தாணு தயாரித்திருந்தார்.
குவிந்த விருதுகள்
67வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குனருக்கான விருதை இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை அசுரன் திரைப்படம் வென்றுள்ளது.
அசுரன் தனுஷ்
67வது தேசிய திரைப்பட விருதுகள் - அசுரன் படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் என அசுரன் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை அள்ளி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விருதுகளுக்காக அல்ல
தேசிய விருது கிடைத்தது குறித்து வெற்றிமாறன் கூறியதாவது, தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக உள்ளது, என்னை போன்ற இயக்குனர்களுக்கு விருதுகள் எப்போதுமே ஊக்கத்தை கொடுக்கும் எனவும் விருதுகளுக்காக படம் இயக்குவதில்லை எனவும் கூறியுள்ளார்.
பாலு மகேந்திரா
மேற்கொண்டு பேசிய வெற்றிமாறன், தனக்கு எந்த விருது வழங்கினாலும் அதை பாலு மகேந்திராவிற்கு சமர்பிப்பேன், இந்த விருதையும் அவருக்கே சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார். அசுரன் சமூக நீதிக்கான கதை எனவும், அது மக்களிடையே போய்ச் சேர வேண்டும் என்பதே முதல் எண்ணமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அசுரன் படத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.