Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இனி தர்ஷன் வாழ்க்கையில் நான் இல்லை.. என்னால் அவருக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது.. காதலி கண்ணீர்!
Recommended Video
சென்னை: தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை, என்னால் அவருக்கு கெட்டப்பெயர் வரக்கூடாது என அவரின் காதலியான சனம் ஷெட்டி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன் மீது ஷெரினுக்கு ஃபீலிங்ஸ் இருந்தது. இதனை அபிராமி மற்றும் வனிதாவிடம் அவர் கூறியிருந்தார். அதேபோல் தர்ஷனிடமும் இதுகுறித்து அவர் பேசியது நேற்றைய எபிசோடில் தெரியவந்தது.
ஆனால் நேற்று முன்தினம் எபிசோடில் வனிதா, அஃபேர் என்று கூறிய ஒரு வார்த்தையால், கோபமடைந்த ஷெரின் எங்களுக்குள் எதுவுமே இல்லை என்று கூறினார். மேலும் தர்ஷனுக்காக வெளியில் காத்திருக்கும் ஒரு ஜீவனை நான் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறினார்.
லாஸ்லியா ரொம்ப ஆட்டிட்யூட் காட்டுது.. சீனியர் நடிகை விமர்சனம்!
தர்ஷனுக்கு சப்போர்ட்
இந்நிலையில் தர்ஷனின் காதலியும் மாடலுமான சனம் ஷெட்டி, ஊடகங்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார். அதில் தான் எப்போதும் தர்ஷனுக்கு சப்போர்ட்டாகதான் இருக்கிறேன்.
உயிரையே வைத்துள்ளேன்
என்னால் தர்ஷனின் இமேஜ் கெடக்கூடாது. தர்ஷன் பிக்பாஸ் டைட்டிலை வின் பண்ண நான் தடையாக இருப்பது போல் தெரிந்தால் அவரை விட்டு விலகி விடுகிறேன். நான் தர்ஷன் மேல் உயிரையே வைத்துள்ளேன்.
மனவேதனை
ஆனால் என்னால் அவருக்கு எந்த கெட்ட பெயரும் இருக்கக்கூடாது. நான் கொடுக்கும் பேட்டிகளால் தர்ஷனுக்கும் ஷெரினுக்கும் மனவேதனை ஏற்படுகிறது. இது எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது.
என் வாழ்க்கையில் இல்லை
தர்ஷன், ஷெரின் இருவரும் என்னால் மனவேதனை அடைய வேண்டாம். இனிமேல் நான் தர்ஷன் குறித்து பேச மாட்டேன். இந்த நிமிஷத்தில் இருந்து நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை. இருந்தாலும் என் மனதில் எப்போதும் தர்ஷன் இருப்பார் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி.