இடத்த பிடிச்சுடனும்.. எப்படி வேணாலும் நடிக்க ரெடி.. உதயநிதி நடிகையின் அதிரடி முடிவு!
Recommended Video
சென்னை: கதைக்கு அவசியம் என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என நடிகை ரெஜினா கேசன்ட்ரா தெரிவித்துள்ளார்.
நடிகை ரெஜினா கேசன்ட்ரா கண்ட நாள் முதல் படத்தில் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகை லைலாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார் ரெஜினா.
இதனை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி ஆகிய படங்கள் ரெஜினாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

சொல்லும் அளவுக்கு
தொடர்ந்து கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் ரெஜினா. ஆனாலும் தமிழில் சொல்லும் அளவுக்கு அவரால் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை.

எதுவும் தெரியாது
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு ரெஜினா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. வந்த புதிதில் சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன்.

யோசிக்கிறேன்
இப்போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
படம் தோல்வி அடைந்தால் நான் என்ன தவறு செய்திருக்கிறேன் என்று யோசிக்கிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் என்னை பற்றித்தான் ஆராய்ச்சி செய்கிறேன்.

எப்படி வேண்டுமானாலும்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். கதைக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு நடிகை ரெஜினா கேசன்ட்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











