Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடித்தேனா... எனக்கே அருவருப்பா இருக்கு..!
மும்பை : தமிழ் சினிமாவில் நடிகையாகத் துவங்கி, பின்னர் பாலிவுட், தற்போது ஹாலிவுட் என கலக்கி வருபவர் ப்ரியங்கா சோப்ரா. 'குவான்டிகோ', 'பேவாட்ச்' ஆகியவற்றில் நடித்ததால் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் ஃபேவரிட் ஆகிவிட்டார்.
இவர் ஆரம் பகாலத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்ததை நினைத்தால் தற்போது தனக்கே அருவருப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். முகத்தை வெள்ளையாக்கும் எனக் கூறி விற்கப்படும் கிரீம் விளம்பரம் பற்றித் தான் இப்படித் தெரிவித்துள்ளார்.
அப்போது அறியாமையால் அந்த விளம்பரங்களில் நடித்துவிட்டேன். டூத்பேஸ்ட்டுக்கு அடுத்து அதிக விற்பனையாகும் பொருள் ஃபேஸ் க்ரீம்கள்தான். நிறத்தால் பல பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையைத் தோன்ற வைத்ததற்காக வெட்கப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
உண்மையைப் புரிந்துகொண்ட உடனே அந்த விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், இனி அப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன் எனவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி என்பது நிறத்தில் இல்லை, நிறம் சார்ந்து உள்ள பாகுபாட்டைத் தான் வெறுப்பதாகவும் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.