Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அழுவதா.. சிரிப்பதா.. என்றே எனக்கு தெரியல.. உயிரில் கலந்த உறவு எஸ்.பி.பி. பிரசன்னா உருக்கமான ட்வீட்!
சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு தனக்கு அழுகையும் சிரிப்பையும் கலந்து உறவை கொடுப்பது ஏன் என்றே தெரியவில்லை என நடிகர் பிரசன்னா உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரோனா நோய் தாக்கி கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், திரும்பி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அனைவரையும் ஏமாற்றிவிட்டு அவர் இயற்கை எய்திவிட்டார்.
அப்புறம் படத்தை யாரை வைத்து முடிப்பீர்கள்.. கேளடி கண்மணி பட இயக்குநரை பிரமிக்க வைத்த எஸ்பிபி!
கண்ணீர் அஞ்சலி
செங்குன்றம், தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று முதலே ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரபலங்கள் இரங்கல்
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா, சூர்யா, மனோ, இயக்குநர் அமீர், திரிஷா, அமலா பால், வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயம் ரவி, மகேஷ் பாபு, சல்மான் கான், சிரஞ்சீவி என இந்திய திரையுலகத்தின் பல பிரபலங்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
உயிரில் கலந்த உறவு
எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்து விட்டார். அவரது மறைவு நேரத்தில் துக்கப்படுவதா? அல்லது அவரது பாடல்களை கேட்டு சந்தோஷம் அடைவதா? என எந்த மனநிலையில் நான் இப்போ இருக்கிறேன் என்றே தெரியவில்லை என நடிகர் பிரசன்னா மிகவும் உருக்கமாக ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். உயிரில் கலந்த உறவு எஸ்.பி. பாலசுப்ரமணியம் என நெகிழ்ந்துள்ளார்.
நான் போகிறேன் மேலே மேலே
பிரசன்னாவின் நாணயம் படத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய, "நான் போகிறேன் மேலே மேலே.. பூலோகமே காலின் கீழே" பாடலில் இடையில் ஒரு சிரிப்பு இருக்கும் அதெல்லாம் வேற யாரும் அனுபவிச்சு பாட முடியுமானு தெரியல. நேற்று ஜேம்ஸ் வசந்த் அந்த பாடல் பதிவு நிகழ்வு பற்றி சொன்னது இன்னும் நெகிழ்வு... என ரசிகர்கள் கமெண்ட் செய்து உருகி வருகின்றனர்.
Recommended Video
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்