Don't Miss!
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அழுவதா.. சிரிப்பதா.. என்றே எனக்கு தெரியல.. உயிரில் கலந்த உறவு எஸ்.பி.பி. பிரசன்னா உருக்கமான ட்வீட்!
சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு தனக்கு அழுகையும் சிரிப்பையும் கலந்து உறவை கொடுப்பது ஏன் என்றே தெரியவில்லை என நடிகர் பிரசன்னா உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரோனா நோய் தாக்கி கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், திரும்பி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அனைவரையும் ஏமாற்றிவிட்டு அவர் இயற்கை எய்திவிட்டார்.
அப்புறம் படத்தை யாரை வைத்து முடிப்பீர்கள்.. கேளடி கண்மணி பட இயக்குநரை பிரமிக்க வைத்த எஸ்பிபி!
கண்ணீர் அஞ்சலி
செங்குன்றம், தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று முதலே ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரபலங்கள் இரங்கல்
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா, சூர்யா, மனோ, இயக்குநர் அமீர், திரிஷா, அமலா பால், வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயம் ரவி, மகேஷ் பாபு, சல்மான் கான், சிரஞ்சீவி என இந்திய திரையுலகத்தின் பல பிரபலங்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
உயிரில் கலந்த உறவு
எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்து விட்டார். அவரது மறைவு நேரத்தில் துக்கப்படுவதா? அல்லது அவரது பாடல்களை கேட்டு சந்தோஷம் அடைவதா? என எந்த மனநிலையில் நான் இப்போ இருக்கிறேன் என்றே தெரியவில்லை என நடிகர் பிரசன்னா மிகவும் உருக்கமாக ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். உயிரில் கலந்த உறவு எஸ்.பி. பாலசுப்ரமணியம் என நெகிழ்ந்துள்ளார்.
நான் போகிறேன் மேலே மேலே
பிரசன்னாவின் நாணயம் படத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய, "நான் போகிறேன் மேலே மேலே.. பூலோகமே காலின் கீழே" பாடலில் இடையில் ஒரு சிரிப்பு இருக்கும் அதெல்லாம் வேற யாரும் அனுபவிச்சு பாட முடியுமானு தெரியல. நேற்று ஜேம்ஸ் வசந்த் அந்த பாடல் பதிவு நிகழ்வு பற்றி சொன்னது இன்னும் நெகிழ்வு... என ரசிகர்கள் கமெண்ட் செய்து உருகி வருகின்றனர்.