Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அழுவதா.. சிரிப்பதா.. என்றே எனக்கு தெரியல.. உயிரில் கலந்த உறவு எஸ்.பி.பி. பிரசன்னா உருக்கமான ட்வீட்!
சென்னை: எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு தனக்கு அழுகையும் சிரிப்பையும் கலந்து உறவை கொடுப்பது ஏன் என்றே தெரியவில்லை என நடிகர் பிரசன்னா உருக்கமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கொரோனா நோய் தாக்கி கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், திரும்பி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அனைவரையும் ஏமாற்றிவிட்டு அவர் இயற்கை எய்திவிட்டார்.
அப்புறம் படத்தை யாரை வைத்து முடிப்பீர்கள்.. கேளடி கண்மணி பட இயக்குநரை பிரமிக்க வைத்த எஸ்பிபி!
கண்ணீர் அஞ்சலி
செங்குன்றம், தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று முதலே ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வந்த நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரபலங்கள் இரங்கல்
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா, சூர்யா, மனோ, இயக்குநர் அமீர், திரிஷா, அமலா பால், வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயம் ரவி, மகேஷ் பாபு, சல்மான் கான், சிரஞ்சீவி என இந்திய திரையுலகத்தின் பல பிரபலங்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
உயிரில் கலந்த உறவு
எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்து விட்டார். அவரது மறைவு நேரத்தில் துக்கப்படுவதா? அல்லது அவரது பாடல்களை கேட்டு சந்தோஷம் அடைவதா? என எந்த மனநிலையில் நான் இப்போ இருக்கிறேன் என்றே தெரியவில்லை என நடிகர் பிரசன்னா மிகவும் உருக்கமாக ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். உயிரில் கலந்த உறவு எஸ்.பி. பாலசுப்ரமணியம் என நெகிழ்ந்துள்ளார்.
நான் போகிறேன் மேலே மேலே
பிரசன்னாவின் நாணயம் படத்திற்காக எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய, "நான் போகிறேன் மேலே மேலே.. பூலோகமே காலின் கீழே" பாடலில் இடையில் ஒரு சிரிப்பு இருக்கும் அதெல்லாம் வேற யாரும் அனுபவிச்சு பாட முடியுமானு தெரியல. நேற்று ஜேம்ஸ் வசந்த் அந்த பாடல் பதிவு நிகழ்வு பற்றி சொன்னது இன்னும் நெகிழ்வு... என ரசிகர்கள் கமெண்ட் செய்து உருகி வருகின்றனர்.