Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
அட, "பேய்"க்குப் பிள்ளையார் சுழி போட்டதே இவர்தானுங்க..!
சென்னை: தமிழில் அதிகமாக பேய் படங்கள் வருவதற்கு காரணமே தன்னுடைய ஷாக் படம் தான் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவிற்கு தற்போது பேய் பிடித்திருக்கிறது என்றால் மிகையில்லை. அந்தளவிற்கு பேய்ப்படங்கள் ரிலீசாகி வருகின்றன. புதிதாகவும் பல பேய்ப்படங்கள் தயாராகி வருகின்றன. சமீபகாலமாக பிரபல நடிகைகளும் பேய்ப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் அதிகளவில் பேய்ப்படங்கள் வர காரணமே நான் தான் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பிரசாந்த்.
சாகசம்...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நாயகனாக நடித்த சாகசம் படம் கடந்த வாரம் ரிலீசாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
குயின் ரீமேக்...
பிரசாந்த் தமிழில் நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. சாகசம் படத்தைத் தொடர்ந்து இந்தி படமான குயின் மற்றும் ஸ்பெஷல் 26 ஆகிய படங்களின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் பிரசாந்த்.
ஷாக்...
தற்போது பேய் படங்களுக்கு தமிழில் அதிக வரவேற்பு உள்ளது. ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு ஷாக் என்ற பேய்ப்படத்தில் நடித்திருந்தார் பிரசாந்த்.
பேய்ப்பட சீசன்...
இப்படத்தைத் தொடர்ந்தே தமிழில் பேய்ப் பட சீசன் கொடி கட்டிப் பறக்கிறது எனக் கூறியுள்ள பிரசாந்த், தமிழில் தற்போது அதிகமான பேய் படங்கள் வரக் காரணமே தன்னுடைய ஷாக் படம் தான் என்கிறார்.
பிள்ளையார் சுழி...
இதன்மூலம், தமிழில் பேய் பட சீசனிற்கு பிள்ளையார் சுழி போட்டதே நான் தான் எனக் கூறும் பிரசாந்த், மீண்டும் பேய் கதையில் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.