Don't Miss!
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Automobiles இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- News ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு? வீடு முதல் மின்சாரம் வரை வேறு என்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கும்
- Technology Vodafone-க்கு கும்பிடு.. மொத்தமா முடிச்சு விட்டாச்சு.. ஒரே திட்டம்தான்.. டேட்டா, கால்களுக்கு லிமிட் இல்ல!
- Lifestyle காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அட, "பேய்"க்குப் பிள்ளையார் சுழி போட்டதே இவர்தானுங்க..!
சென்னை: தமிழில் அதிகமாக பேய் படங்கள் வருவதற்கு காரணமே தன்னுடைய ஷாக் படம் தான் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவிற்கு தற்போது பேய் பிடித்திருக்கிறது என்றால் மிகையில்லை. அந்தளவிற்கு பேய்ப்படங்கள் ரிலீசாகி வருகின்றன. புதிதாகவும் பல பேய்ப்படங்கள் தயாராகி வருகின்றன. சமீபகாலமாக பிரபல நடிகைகளும் பேய்ப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் அதிகளவில் பேய்ப்படங்கள் வர காரணமே நான் தான் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பிரசாந்த்.
சாகசம்...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நாயகனாக நடித்த சாகசம் படம் கடந்த வாரம் ரிலீசாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
குயின் ரீமேக்...
பிரசாந்த் தமிழில் நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. சாகசம் படத்தைத் தொடர்ந்து இந்தி படமான குயின் மற்றும் ஸ்பெஷல் 26 ஆகிய படங்களின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் பிரசாந்த்.
ஷாக்...
தற்போது பேய் படங்களுக்கு தமிழில் அதிக வரவேற்பு உள்ளது. ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு ஷாக் என்ற பேய்ப்படத்தில் நடித்திருந்தார் பிரசாந்த்.
பேய்ப்பட சீசன்...
இப்படத்தைத் தொடர்ந்தே தமிழில் பேய்ப் பட சீசன் கொடி கட்டிப் பறக்கிறது எனக் கூறியுள்ள பிரசாந்த், தமிழில் தற்போது அதிகமான பேய் படங்கள் வரக் காரணமே தன்னுடைய ஷாக் படம் தான் என்கிறார்.
பிள்ளையார் சுழி...
இதன்மூலம், தமிழில் பேய் பட சீசனிற்கு பிள்ளையார் சுழி போட்டதே நான் தான் எனக் கூறும் பிரசாந்த், மீண்டும் பேய் கதையில் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.