Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்.. எஸ்பிபியை சந்தித்த பிறகு பாரதிராஜா குரல் தழுதழுக்க பேட்டி!
சென்னை: எஸ்பி பாலசுப்ரமணியத்தை நேரில் சந்தித்த இயக்குநர் பாரதிராஜா தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.
மருத்துவமனையின் இந்த அறிக்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பி பாலசுப்ரமணியத்தை நேற்று நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு உறவினர்கள் வருகை.. போலீசார் குவிப்பு!
செய்தியாளர் சந்திப்பு
இதனை தொடர்ந்து இன்று இயக்குநரும் எஸ்பிபியின் நெருங்கிய நண்பருமான பாரதிராஜா மருத்துவமனைக்கு நேரில் சென்றார். எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து பேசிய அவர் பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை சந்தித்தார்.
உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்
அப்போது அவர் பேசியதாவது, பாலு என்னுடைய 50 வருட கால நண்பன். சில சூழ்நிலைகளில் வார்த்தை வராது. துக்கத்தில் இருக்கும் போதும் வருத்தத்தில் இருக்கும் போதும் வார்த்தைகள் வராது. நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்.
குரல் தழுக்க
உலக தமிழர்கள் அனைவரும் அவர் மீண்டும் எழுந்து வர வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது. இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பாலு சிறந்த கலைஞன் மட்டுமின்றி அற்புதமான மனிதரும் ஆவார். இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா குரல் தழுதழுக்க பேசினார்.
Recommended Video
ரசிகர்கள் வருகை
இதனிடையே எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு எஸ்பிபியின் ரசிகர்களும் வரத்தொடங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.