Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்.. எஸ்பிபியை சந்தித்த பிறகு பாரதிராஜா குரல் தழுதழுக்க பேட்டி!
சென்னை: எஸ்பி பாலசுப்ரமணியத்தை நேரில் சந்தித்த இயக்குநர் பாரதிராஜா தான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.
மருத்துவமனையின் இந்த அறிக்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பி பாலசுப்ரமணியத்தை நேற்று நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு உறவினர்கள் வருகை.. போலீசார் குவிப்பு!
செய்தியாளர் சந்திப்பு
இதனை தொடர்ந்து இன்று இயக்குநரும் எஸ்பிபியின் நெருங்கிய நண்பருமான பாரதிராஜா மருத்துவமனைக்கு நேரில் சென்றார். எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து பேசிய அவர் பின்னர் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை சந்தித்தார்.
உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்
அப்போது அவர் பேசியதாவது, பாலு என்னுடைய 50 வருட கால நண்பன். சில சூழ்நிலைகளில் வார்த்தை வராது. துக்கத்தில் இருக்கும் போதும் வருத்தத்தில் இருக்கும் போதும் வார்த்தைகள் வராது. நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்.
குரல் தழுக்க
உலக தமிழர்கள் அனைவரும் அவர் மீண்டும் எழுந்து வர வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது. இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பாலு சிறந்த கலைஞன் மட்டுமின்றி அற்புதமான மனிதரும் ஆவார். இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா குரல் தழுதழுக்க பேசினார்.
Recommended Video
ரசிகர்கள் வருகை
இதனிடையே எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு எஸ்பிபியின் ரசிகர்களும் வரத்தொடங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
Actor Ajith: அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்.. காத்திருக்கும் ரசிகர்கள்!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!