Don't Miss!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்?
டெல்லி: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் தியேட்டர்களை திறக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், தியேட்டர் ஓனர்கள், தயாரிப்பாளர்கள், அமேசான் பிரைம் உள்ளிட்ட OTT தள நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தியேட்டர்கள் மூன்று மாத காலத்துக்கும் மேலாக மூடப்பட்டு கிடக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாடு முழுவதும் தியேட்டர்களை திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
அதில், உரிய பாதுகாப்பு அம்சங்களுடன், ஒரு சீட் இடைவெளி விடுதல், மற்றும் ஒரு ஆல்டர்னெட் வரிசையை காலியாக விடுதல், ஏசியை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகளை அமைச்சகம் விதித்துள்ளது.
சுஷாந்துக்கு அஞ்சலி.. தில் பெச்சாரா படத்திற்கு ரேட்டிங் 9.9 கொடுத்த ஐடிஎம்பி.. கொண்டாடும் ஃபேன்ஸ்!
இந்த தீவிர கட்டுப்பாடுகளுடன் தியேட்டரை திறந்தால், வெறும் 25 சதவீதம் பேர் தான் தியேட்டருக்கு வருவார்கள் என்றும், அதனால், தியேட்டர் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்றும், மாற்று வழிகளை அரசு செய்து தர வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
விரைவில் தியேட்டர்களை திறக்க என்னவெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் அந்த மீட்டிங்கில் ஆலோசிக்கப்பட்டுள்ளன.