Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
“கார்த்திய நம்பிதான் குதிரைல ஏறுனேன், ஆனா?” பொன்னியின் செல்வன் பாடல் ரிலீஸில் ஜெயம்ரவி ஓப்பன் டாக்!
சென்னை: மணிரத்னம் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டு 'பொன்னியின் செல்வன்' படத்தில் தங்களது அனுபவங்களைப் பேசினர்.
அப்போது கார்த்தியை மேடையில் வைத்துக்கொண்டே அவரை நம்பி மோசமான குட்டி ஸ்டோரியை நடிகர் ஜெயம் ரவி கூறினார்.
'பொன்னியின் செல்வன்’ படத்தின் சூட்டிங் ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி: சொன்னா நம்பிதான் ஆகணும்!
இரண்டு பாகங்கள்
பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்ட பலரும் முயன்றனர். ஆனால் அது தற்போது மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.
பொன்னி நதி பாடலுக்கு வரவேற்பு
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தற்போது வெளியான 'பொன்னி நதி' என்ற முதல் பாடல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது/ "காவிரியாள் நீர் மடிக்கு, நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும், உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும், சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்" என சோழ தேசத்தின் பெருமையையும் பொன்னிநதி பெருமையையும் வந்தியத்தேவன் பாடும்படி வரிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர். ரஹ்மான் பாடியிருக்கும் இப்பாடலை எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
அடுத்தடுத்து அப்டேட்கள்
'பொன்னியின் செல்வன்' வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளையும், புரோமோஷன் பணிகளையும் பொன்னியின் செல்வன் குழு தொடங்கியுள்ளது. டீசர், முதல் பாடலைத் தொடர்ந்து, ட்ரெய்லரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் 'பொன்னியின் செல்வன்' ஜுரம் இப்போதே உச்சம் தொட்டுவிட்டது.
அருள்மொழிவர்மன் ஜெயம் ரவி
'பொன்னியின் செல்வன்' படத்தில் சோழ இளவரசன் அருள்மொழிவர்மன் என்ற பாத்திரத்தில், ஜெயம் ரவி நடித்துள்ளார். இந்நிலையில், 'பொன்னி நதி' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, "பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது, எனக்கு மறக்க முடியாத அனுபவம், அதுமட்டும் இல்லாமல் இது எனக்கு பெருமை" எனத் தெரிவித்தார். "ஜெயராம் தனக்கு குருசாமி எனவும், அவருடன் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி" என்றும் கூறினார்.
ரசிகர்களுக்குப் பாராட்டு
'பொன்னி நதி' பாடலை ரசிகர்கள் ரொம்பவே என்ஜாய் செய்து ரசித்தனர். அதனைக் குறிப்பிட்ட ஜெயம் ரவி, "பாடலின் ஒவ்வொரு ஷாட்டையும் ரசித்து ஆர்ப்பரித்த ரசிகர்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளதாகவும், சரியான உழைப்பிற்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் அங்கீகாரம் கொடுப்பார்கள்" என்றும் அவர்களை பாராட்டினார்.
Recommended Video
கார்த்திய தான் நம்பினேன்
தொடர்ந்து பேசிய அவர், "முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடித்துள்ளேன், இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது" எனக் குறிப்பிட்டார். மேலும், "பொன்னியின் செல்வன் படத்தில் குதிரைக் காட்சிகள் அதிகமாக இருந்ததாகவும், இதில் என்னவிட கார்த்தி தான் மாஸ்டர்" என்றும் கூறினார். அதுமட்டும் இல்லாமல், "குதிரையில் ஏற தயங்கிய என்னை, கார்த்தி தான் அழைத்துச் சென்று ட்ரெய்னிங் கொடுத்ததாகவும், ஆனால், அவரே ஒருமுறை குதிரையில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகவும்" சிரித்துக் கொண்டேக் கூறினார். "கார்த்தியே விழுந்துவிட்டப் பிறகு, நாமும் விழுந்தால் தவறில்லை என்றே மீண்டும் குதிரையில் ஏறினேன்" என ஜெயம் ரவி கூறினார்.