Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஏகப்பட்ட விரல்களை நீட்டும் சிவ கார்த்தி... கட்டுப்படியாகாது என்கிறார் பாண்டிராஜ்
சென்னை: சிவகார்த்திக்கேயனை வைத்து படம் பண்ணும் அளவிற்கு பசங்க புரொடக்ஷன் வளர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திக்கேயனை தனது மெரினா படம் மூலம் ஹீரோவாக்கியவர் பாண்டிராஜ்.
தற்போது தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி, முன்னணி நாயகர்களுள் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திக்கேயன்.
ரஜினிமுருகன்...
பொங்கலுக்கு ரிலீசான ரஜினிமுருகன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. உடன் ரிலீசான மற்ற படங்களை விட அதிக வசூலையும் தந்து வருகிறது.
உயரும் சம்பளம்...
இவ்வாறு ஒவ்வொரு படங்கள் மூலமும் அதிகளவு ரசிகர்களைப் பெற்று வருகிறார் சிவகார்த்திக்கேயன். இதனால் அவரது வாய்ப்பும், சம்பளமும் அதிகரித்து வருகிறது.
தனுஷ்...
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திக்கேயன் குறித்துப் பேசிய தனுஷ், ‘அவருக்கு சம்பளம் கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை' எனத் தெரிவித்திருந்தார். காரணம் ஆரம்பகட்டத்தில் சிவகார்த்திக்கேயனின் வளர்ச்சியில் அதிகம் உதவியவர் தனுஷ் என்றால் மிகையில்லை.
எதிர்நீச்சல்...
சிவகார்த்திக்கேயனை வைத்து அவர் எதிர்நீச்சல் படத்தை எடுத்திருந்தார். அப்படத்தில் அவர் பாடல் ஒன்றிலும் நடித்திருந்தார்.
பாண்டிராஜ்...
இந்நிலையில், பசங்க 2 மற்றும் கதகளி பட வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களை நேற்று சந்தித்தார் இயக்குநர் பாண்டிராஜ். அப்போது சிவகார்த்திக்கேயனை வைத்து படம் தயாரிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
சிவகார்த்திக்கேயன்...
அதற்குப் பதிலளித்த பாண்டிராஜ், "கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ணவேண்டும் என்ற திட்டம் இருந்தது. ஆனால், தற்போது சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் எகிறி விட்டது.
எட்டாத உயரத்தில் சம்பளம்...
சம்பளத்தைக் கேட்டால் அவர் சில விரல்களை நீட்டுகிறார். எனவே, அவரை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு பசங்க புரொடக்ஷன் வளர வேண்டும்" என்றார்.