Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கமர்ஷியல் படத்துக்காக என்னால் இதைச் செய்யமுடியாது - 'காலா' நடிகை பளீச்!
மும்பை : இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 'நியூட்டன்' படத்தில் நடித்திருப்பவர் நடிகை அஞ்சலி பாட்டீல். ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் 'காலா' படத்திலும் நடித்திருக்கிறார்.
நடிப்பு மட்டுமே என் வாழ்க்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி பாட்டீல்.
கமர்ஷியல் படங்களாக இல்லாமல் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதுதான் பிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நடிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை :
'நடிப்பு என்பது எனது வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டுமே. பயணம் செய்வது, புத்தகங்கள் வாசிப்பது, சமையல் செய்வது, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வது எனப் பலவகையான செயல்களில் ஈடுபடவே எனக்கு விருப்பம்.
சினிமா பிடிக்கும் :
மற்ற வேலைகளைப் போல நடிப்பதும் ஒரு வேலைதான். சினிமாவில் எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. அது எனது செலவுகளைச் சமாளிக்க உதவுவதால் அது பிடித்திருக்கிறது.
கமர்ஷியல் படங்களில் நடிக்கமாட்டேன் :
கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் நல்ல சம்பளம் கிடைக்கும்தான். அதற்காக நான் ஒரு விற்பனைப் பொருளாக மாறவேண்டும். பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிப்பதற்காக பகட்டான ஆடைகளை அணியவேண்டும். என்னால் அவற்றையெல்லாம் செய்யமுடியாது.
நல்ல கதைதான் தேவை :
எனக்குத் தேவையானதெல்லாம் நல்ல கதை, திறமையான இயக்குநர், நல்ல மனிதர்கள், ரசிகர்கள் தான். அதனால் தான் நல்ல கதைகள் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார் அஞ்சலி பாட்டீல்.