Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எனக்கு செக்ஸ் ரொம்ப பிடிக்கும், என்ஜாய் பண்ணுகிறேன், ஏங்குகிறேன்: நடிகர் ஓபன் டாக்
மும்பை: எனக்கு செக்ஸ் பிடிக்கும், அதற்காக நான் ஏங்குகிறேன் என்று பாலிவுட் நடிகர் அபய் தியோல் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மும்பையில் உள்ள ஹோட்டல்களில் சோதனை நடத்தி இளம் ஜோடிகளை போலீசார் கைது செய்தனர். சம்மதித்து ஒன்றாக இருப்பவர்களை ஏன் போலீசார் கைது செய்ய வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதையடுத்து மும்பை போலீஸ் கமிஷனர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகனும், நடிகருமான அபய் தியோல் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
செக்ஸ்
செக்ஸ் மீது நம் சமூகத்திற்கு உள்ள வெறுப்பை பார்த்து நான் குழம்பியுள்ளேன். நான் செக்ஸை ரசித்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக ஏங்குகிறேன், அதை நான் தொடர்ந்து செய்வேன். இந்த உண்மையை நான் மறைக்க மாட்டேன். இப்படி கூற லேசாக வெட்கமாக உள்ளது.
வளர்ப்பு
செக்ஸ் பற்றி பேச வெட்கப்படுவதற்கு வளர்ப்பு தான் காரணம். நாட்டில் உள்ள பிறரைப் போன்று நான் நானும் வளர்க்கப்பட்டுள்ளேன். சினிமாக்காரர்கள் என்றால் அப்படி இப்படி இருப்பார்கள் என்று மக்கள் நினைப்பது உண்டு. செக்ஸ் பற்றி பேசுவது சமூகத்தில் ஒரு பெரிய குற்றமாக உள்ளது.
இளசுகள்
செய்யாத குற்றத்திற்காக இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பொது இடத்தில் இப்படியா வேதனை செய்வது? . போலீசார் தான் நாகரீகம் இல்லாமல் நடந்து கொண்டுள்ளனர் என நினைக்கிறேன்.
உறவு
இளசுகள் செக்ஸ் வைத்துக் கொண்டதற்காக இத்தனையும் செய்தார்கள். அது எப்படி அவர்கள் செக்ஸ் வைக்கலாம். தண்டிக்க வேண்டாமா என்று தான் செய்துள்ளார்கள்.
ஏன்?
செக்ஸ் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. அப்படி இருக்கையில் ஏன் சிலருக்கு அதை ஏற்றுக் கொள்ள கஷ்டமாக உள்ளது என்று அபய் தெரிவித்துள்ளார்.