Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நிஜமாகவே இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கலை... நல்ல ரெஸ்பான்ஸ்... ஓ மை கடவுளே டைரக்டர் ஹேப்பி
சென்னை: நிஜமாகவே இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என்று ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம், ஓ மை கடவுளே. வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷா ரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தை அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிச்கர்ஸ் அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
ஓ மை கடவுளே படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்ளோ தெரியுமா? ஆரம்பமே அசத்தல்தான்!
ரமேஷ் திலக்
இந்த படம் நேற்று ரிலீஸ் ஆனது. சக்தி பிலிம் பேக்டரி படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது. விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். லியான் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி கடவுளாக நடித்துள்ளார். அவர் உதவியாளராக ரமேஷ் திலக் நடித்துள்ளார். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
வாணி போஜன்
இதில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் வாணி போஜன். அவர் கூறும்போது, '
இது என் இதயத்துக்கு நெருக்கமான படம். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு கவனமாக, தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் மட்டுமே நடித்துவருகிறேன். தமிழில் அற்புதமான வாய்ப்பாக, இந்தப் படம் அமைந்திருக்கிறது. அஷ்வத் சிறப்பாக இயக்கி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
எதிர்பார்த்தீர்களா?
இந்நிலையில் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரவேற்பை எதிர்பார்த்தீர்களா? என்று இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவிடம் கேட்டபோது, 'இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று தெரியும். ஏனென்றால் இதன் ஸ்கிரிப்டை 5 வருடமாக செதுக்கி செதுக்கி உருவாக்கினேன். ஒவ்வொரு கேரக்டருக்குமான முக்கியத்துவம், அதை எப்படி இன்னும் சுவராஸ்யமாக்குவது என்று தொடர்ந்து ஸ்கிரிட்டை ஷார்பாக அமைத்தேன்.
மகிழ்ச்சி
இப்போது படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படியொரு வரவேற்பை பெறும் என்று நான் நினைக்கவில்லை. வெளியூர் தியேட்டர்களுக்கும் விசிட் அடித்தோம். அங்கும் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து பார்க்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல கதைக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதற்கு இந்தப் படமும் சாட்சி என்றார்.