Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை: விஜய் சேதுபதி
சென்னை: நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் மிகவும் பிசியான ஹீரோ விஜய் சேதுபதி தான். மனிதர் அத்தனை படங்களை கையில் வைத்துள்ளார். அவர் த்ரிஷாவுடன் நடிக்கும் 96 படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா திங்கட்கிழமை நடந்தது.
96 படத்தை பிரேம் குமார் இயக்குகிறார். இந்நிலையில் படம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது,
காதல் கதை
96 படம் 12ம் வகுப்பில் மலரும் காதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவது. 96ம் ஆண்டு படிக்கும் வகுப்பினரை குறிப்பதே தலைப்பு 96. த்ரிஷா என்னுடன் நடிப்பாரா என்று நினைத்தேன்.
த்ரிஷா
த்ரிஷாவுக்கு 96 படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவர் நடிக்க ஒப்புக் கொண்டார். நான் படத்தில் ஒரு சிறு பகுதியில் பள்ளி மாணவனாக வருவேன்.
கவலை
கதாபாத்திரத்தின் சவாலை நினைத்து கவலைப்படத் தேவையில்லை. ஒரு நடிகராக நான் உண்மையாக இருந்து, திரைக்கதைப்படி நடிக்க வேண்டும். நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை.
ஜெஸி
நான் த்ரிஷா, நயன்தாரா, தமன்னா ஆகியோரின் தீவிர ரசிகன். அவர்களுடன் சேர்ந்து நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நான் பார்த்து ரசித்த ஜெஸியுடன் தற்போது ஜோடியாக நடிக்கிறேன் என்றார் விஜய் சேதுபதி.