Don't Miss!
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- News ‛‛கடவுளே நான் ஜெயிக்கணும்’’.. ஓட்டுப்போட சென்றதும் இவிஎம் முன்பு தமிழிசை செய்ததை கவனீச்சிங்களா!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னது சிம்புவும் நயன்தாராவும் ஜோடியா நடிக்கிறாங்களா?: பிரபுதேவா?
சிம்புவும்-நயன்தாராவும் இணைந்து நடிப்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இயக்குநரும் நயன்தாராவின் முன்னாள் காதலருமான பிரபுதேவா
சிம்புவுடன் நயன்தாராவுக்கு ஏற்பட்ட காதல் முன்பு முறிந்து போனது. ஆனால், பிரபுதேவாவுடன் நயன்தாராவிற்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது.
அதனால், மும்பையில் வீடு எடுத்து தங்கியிருந்த பிரபுதேவாவுடன் அவ்வப்போது சென்று காதல் வளர்த்து வந்த நயன்தாரா, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவுக்கும் மாறினார்.
ஆனபோதும், கடைசி நேரத்தில் சிம்புவுடனான காதல் வெடித்து சிதறியது போன்று, கல்யாண தேதி அறிவிக்கயிருந்த நேரத்தில் பிரபுதேவாவுடனான உறவையும் முறித்துக்கொண்டு வெளியேறினார்.
இந்த நேரத்தில் இனி யாருடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கவே மாட்டார் என்று நினைத்தார்களோ அதே சிம்புவுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கும இந்த படத்தில், சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சிகளும் உள்ளதாம். இதுபற்றி பிரபுதேவாவிடம் அவரது நண்பர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதில் சொன்ன பிரபு தேவா கூறியதாவது:
என் ரூட்டு வேற
நான் இப்போது மும்பைவாசியாகிவிட்டேன். என் ரூட்டு வேறமாதிரி போயிட்டிருக்கு. தமிழ்நாட்டுல என்ன நடந்துக்கிட்டிருக்குன்னு, தமிழ்நாட்டுல இருக்குறப்பவே கவனிக்க மாட்டேன். இப்போ சுத்தமா இல்லை.
யார் கூட யார் நடிச்சா என்ன?
என்னோட கவனம், உழைப்பு சினிமா சினிமாதான். யார் யாரோட நடிக்கிறாங்க. யார் யாரை காதலிக்கிறாங்க என்பது மாதிரியான விஷயங்களை கவனிக்கவே மாட்டேன்.
எனக்கு அவசியமில்லை
காலை 7 மணியிலிருந்தே இரவு 1 மணி வரைக்கும் சினிமாவில் உழைக்கிறேன். இதில் மற்ற விஷயங்களை தெரிந்து கொள்ள எனக்கு நேரமில்லை. அதற்கு அவசியமும் இல்லை.
சோனாக்ஷி சின்ஹா
சோனாக்ஷி சின்ஹா என் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு தனியான காரணம் எதுவும் இல்லை. என்னோட ஹீரோயின்கள் பக்கா இண்டியன் லுக்கோட இருக்கணும், அதுக்கு சோனாக்ஷி பொருத்தமா இருப்பதால் அவர் நடிக்கிறார்.
ஹாலிவுட் படம் இயக்கணும்
சினிமாவில நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்போ கமர்ஷியல் படங்கள்தான் பண்ணிக்கிட்டிருக்கேன். மனசை ஊடுருவுகிற மாதிரி அழுத்தமான கதையோட ஒரு படம் பண்ணணும், அதே நேரத்துல தி லார்ட் ஆப் ரிங்ஸ், ஸ்பைடர் மேன் மாதிரியும் ஒரு படம் பண்ணணும் என்று கூறியுள்ளார் பிரபுதேவா.
மன்னிக்க விரும்பாத நயன்தாரா
அதே சமயம் பிரபுதேவா இயக்கும் படத்தில் நடிப்பீர்களா? என்று நயன்தாராவிடம் கேட்டதற்கு, சிம்புவையாவது மன்னிக்கலாம், ஆனால் பிரபுதேவாவை மன்னிக்க முடியாது என்று நயன்தாரா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.