Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நிறைய பேசினா எதிரிகளைத்தான் சம்பாதிக்க வேண்டி வரும்! - ரஜினிகாந்த்
Recommended Video
சென்னை: ஏற்கெனவே நிறைய பேசி பேசித்தான் அரசியல் பண்ணாங்க. நிறைய பேசினா எதிரிகளைத்தான் சம்பாதிக்க வேண்டி வரும் என்றார் ரஜினிகாந்த்.
சென்னை போயஸ் கார்டனில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் ரஜினிகாந்த். அப்போது தமிழகத்தின் இன்றைய கொந்தளிப்பான சூழல் குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வளவு துரிதமாக அமைக்க முடியுமோ அவ்வளவு துரிதமாக அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தார்.
அதேபோல ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தும்போது ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் அல்லது எதிர்ப்பைக் காட்டும் வகையில் கருப்புத் துணி காட்ட வேண்டும் என்றார். இன்னொரு படி மேலேபோய், ஐபிஎல் நிர்வாகம் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்கள் தங்கள் அணியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அவர் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது ரஜினிகாந்த், "பாருங்க... நிறையப் பேசிக் கொண்டே இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏற்கெனவே நிறைய பேசிப் பேசித்தான் அரசியல் பண்ணாங்க. நிறைய பேசினா எதிரிகளைத்தான் சம்பாதிக்க வேண்டி இருக்கும்...," என்று கூறிவிட்டு பேட்டியை முடித்தார்.