'3 முறை கருக்கலைப்பு...' அந்த விஷயம் பற்றி பேசவிரும்பவில்லை... பிரபல ஹீரோயின் டென்ஷன்
ஐதராபாத்: மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகக் கூறிய விஷயம் குறித்து எதுவும் பேசவிரும்பவில்லை என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தமிழில், சாக்ரடீஸ் இயக்கத்தில் சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.
தொடர்ந்து சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் படத்தில்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், அங்கு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார், லாவண்யா திரிபாதி. அதர்வா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்கி வருகிறார்.

போலீஸ் அதிகாரி
இந்த படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். லாவண்யா திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் இருப்பவராக நடிக்கிறார். இவரை ஒரு கும்பல் திடீரென்று கடத்திச் செல்ல, ஹீரோ காப்பாற்றுவது போல இதன் கதை அமைப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை லாவண்யா திரிபாதி, சுனிசித் என்ற நடிகர் மீது சைபர் கிரைம் போலீஸில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

லாவண்யா, தமன்னா
சுனிசித் என்ற நடிகர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், தன்னை தியாக நட்சத்திரம் என்று கூறிகொண்டார். தனது வாய்ப்புகளை மகேஷ்பாபுவும் ரவிதேஜாவும் பறித்துக்கொண்டதாக கூறிய அவர், லாவண்யா திரிபாதி, தமன்னா உட்பட சில நடிகைகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இருந்தார்.

பிரிந்து விட்டார்
அதோடு லாவண்யா தன்னைத் திருமணம் செய்துகொண்டார் என்றும் மூன்று முறை அவர் கருக்கலைப்பு செய்தார் என்றும் பின்னர் லாவண்யா, என்னை பிரிந்து விட்டார் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோ டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து அந்த நபர் தன்னைப் பற்றி கேவலமான, பொய்யான கருத்துகளை தெரிவித்துள்ளதாக, நடிகை லாவண்யா ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

பேச விரும்பவில்லை
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீசார் அந்த வீடியோவை இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இந்நிலையில், நடிகை லாவண்யாவிடம் இதுபற்றி கேட்டபோது, 'அந்த விஷயம் பற்றி பேசவிரும்பவில்லை. அதைப் பேசி அவனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. நான் என்ன சொல்ல வேண்டுமோ, அதை போலீசில் தெரிவித்துவிட்டேன். அவர்கள் எடுக்கும் நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். அதற்கு பிறகு, போலீஸுக்கு ஏன் சென்றேன் என்பது பற்றி பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











