Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எப்படி கழுவி ஊற்றினாலும் கவலையில்லை... ஒரு கோடி டிஸ்லைக்ஸ் வாங்கிய பிறகும் பிரபல நடிகை அசால்ட்!
சென்னை: பிரபல நடிகையான ஆலியா பட் ரசிகர்கள் எப்படி கழுவி ஊற்றினாலும் தனக்கு கவலையில்லை என கூறியுள்ளார்.
Recommended Video
முகேஷ் பட்டின் விஷேஸ் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் படம் சதக் 2. இந்தப் படத்தை ஆலியா பட்டின் தந்தையான மகேஷ் பட் இயக்கியுள்ளார்.
இதில் சஞ்சய் தத், பூஜா பட், ஆலியா பட் மற்றும் ஆதித்யா ராய் கபூர், குல்ஷன் குரோவர், மகரந்த் தேஷ்பாண்டே உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மோகன்லால் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை.. ஓய்வு பெற்ற 'தல' தோனி & ரெய்னாவுக்கு ராயல் ஃபேர்வெல்!
10 மில்லியன் டிஸ்லைக்ஸ்
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் கடந்த 12ஆம் தேதி வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளேயே ஒரு மில்லியனுக்கு மேல் டிஸ்லைக்குகளை குவித்தது சடக் 2. இந்நிலையில் சடக் 2 படத்தின் ட்ரெயிலர் இன்று வரை 10 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது.
அதிர்ச்சியில் படக்குழு
வெறும் ஐந்தரை லட்சம் லைக்குகளை மட்டுமே பெற்றுள்ளது இந்த ட்ரெயிலர். 735 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலருக்கே ரசிகர்கள் இப்படி எதிர்ப்பை காட்டுவது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வாரிசுகள்தான் காரணம்
கடந்த ஜூன் மாதம் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ளது தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு ஆலியாபட், கரன் ஜோஹர் மற்றும் சல்மான்கான் உள்ளிட்ட சில பாலிவுட் வாரிசுகள்தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
அவர்களை பின்தொடருவதை குறைத்த ரசிகர்கள், அவர்களின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் ஆலியா பட், ரியா சக்ரவர்த்தி உட்பல சுஷாந்த் மரணத்திற்கு காரணமானவர்கள் என கூறப்படும் பலரின் சமூக வலைதள பக்கத்திலும் கமெண்ட் மூலம் கழுவி ஊற்றி வருகின்றனர்.
நீக்கத் திட்டம்?
இதனால் ஆலியா பட் உட்பட பலரும் தங்களின் கமென்ட் ஆப்ஷனை முடக்கி வைத்துள்ளனர். திரையுலகில் எந்த திரைபடமும் செய்யாத வகையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட டிஸ்லைக்குகளை பெற்று மோசமான சாதனையை செய்துள்ளதால் ஆலியா பட் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களில் இருந்து அவரை நீக்கி விடலாமா என யோசித்து வருகிறது படக்குழு.
கவலையில்லை
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் என்னை வெறுப்பவர்களை பற்றியும் அவதூறாக பேசுபவர்களையும் பற்றியும் நான் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. விரும்புகிறவர்களும் வெறுப்பவர்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது.
பாராட்ட வேண்டும்
ஹேட்டர்ஸ் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் இரண்டுமே இருக்கும். எனது பட டிரெய்லரை டிரெண்ட் செய்ததால் அவர்களை பாராட்ட வேண்டும். டிஸ்லைக் செய்பவர்களை பற்றி எனக்கு கவலையில்லை என அசால்ட்டாக கூறியுள்ளார்.