Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்கப் பிடிக்காது! - எஸ்ஏ சந்திரசேகரன்
எனக்கு ஜெயிக்கிர குதிரையில் பயணிக்கப் பிடிக்காது என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்தார்.
கிருமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ராஜேந்திரன், எம்.ரஜினி ஜெயராமன், எல்.ப்ரிதிவி ராஜ், கே. ஜெயராமன் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன், தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
படத்தின் இயக்குநர் அனுசரண் பேசுகையில், "கிருமி திரைப்படம் உலக அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது. அந்த திரைப்படவிழாவில் திரையிடவிருக்கும் முதல் தமிழ் படம் இதுதான். எல்லாம் உறுதியான பின்பு, அது எந்த திரைப்பட விழா என்பதை நான் வருகிற 17 ஆம் அறிவிக்கிறேன்.
நாயகன் கதிரை வைத்து என்னுடைய முதல் படத்தை இயக்க நான் விரும்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோர்கள் வார்த்தைக்காகத்தான் அவரை வைத்து படம் இயக்கினேன்," என்றார்.
படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் பேசும் போது, "இந்த படத்தை நான் மூன்று றை நான் பார்த்துவிட்டேன் ஒரு முறை கூட படம் எனக்கு சலிக்கவில்லை என்பது தான் உண்மை. ரசிகர்கள் படத்தை பார்க்கும் போது படம் அவர்கள் மனதை விட்டு நிச்சயம் நீங்காது," என்றார்.
இறுதியாக பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகரன், இந்த படத்தின் இயக்குநர் அனு சரணை எனக்கு படம் இயக்கச் சொல்லிக் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நிச்சயமாக படம் வெற்றி பெற்ற பின்பு அவர் என்னிடம் வந்தால் நான் அவருக்கு படம் இயக்க வாய்ப்பு தரமாட்டேன். ஏன்னா எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்கப் பிடிக்காது. நான் இந்தப் படத்தைப் பார்க்க வந்த போது, பாதி படம்தான் பார்ப்பேன் என்றேன். முழு படத்தையும் பார்த்து விட்டுத்தான் சென்றேன். அதற்க்கு காரணம் படம் அவ்வளவு அருமையாக இருந்தது," என்றார்.