Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'திரையில அப்படி பண்ணணுங்கறது என் பொறுப்பல்ல.. ஆனா, அதை நோக்கிதான் பயணிக்கிறேன்.. வித்யா பாலன்!
மும்பை: வலிமையான பெண்களை திரையில் காட்ட வேண்டும் என்பது என் பொறுப்பல்ல என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளர்.
Recommended Video
பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். சஞ்சய் தத், சைஃப் அலிகான், நடித்த பரினீதா படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான, டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பரினீதா, பா, மிஷன்மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார்.
உண்மைய சொல்லணும்னா.. சொல்ற அளவுக்கு ஒண்ணுமே பண்ணல பிக்பாஸ்.. வெட்கமே இல்லாமல் ஒத்துக் கொண்ட ஷிவானி!
தமிழில் நிராகரிப்பு
ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்த அவர், ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டார். இதனால், தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை வித்யா பாலன், மலையாளப் படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில், என்.டி.ஆர்.பயோபிக்கில், பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்தார்.
நேர்கொண்ட பார்வை
பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில், அஜித் ஜோடியாக, நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கைக் கதையில், கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது. இப்போது ஷெர்னி உட்பட சில படங்களில் நடித்துவருகிறார்
முகத்தை மாற்றியவர்
பாலிவுட்டில், தான் நடிக்கும் படங்களின் மூலம் பெண்களுக்கான முகத்தை மாற்றியவர் என்கிறார்கள், இவரை. இதுபற்றி அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வலிமையான பெண்களைத் திரையில் காட்ட வேண்டும் என்பது என் பொறுப்பல்ல. அப்படி நான் நினைக்கவில்லை. ஆனால் நான் அதை நோக்கிதான் செல்கிறேன்.
ஊக்கம் பெறுகிறேன்
ஏனென்றால், அதுபோன்ற பெண்களின் கதைகளால் நான் ஈர்க்கப்படுகிறேன். அது போன்ற பெண்களாலேயே நானும் ஊக்கம் பெறுகிறேன். அதனால் அதுபோன்ற கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னை தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்ளும் எந்த கேரக்டரிலும் நடிப்பேன்.
பாலின சமத்துவம்
நான் இப்போது நடித்துள்ள நட்கத் என்ற குறும்படம் கூட ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தாய் தனது இளம் மகனுக்கு பாலின சமத்துவம் பற்றிச் சொல்லும் கதையை கொண்டது இது. இவ்வாறு வித்யா பாலன் கூறியுள்ளார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!