Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
எனக்கும், கணேஷுக்கும் ஃபைட், பிரிந்து வாழ்கிறோம்: குண்டு ஆர்த்தி
சென்னை: கணேஷை விவாகரத்து செய்துவிட்டதாக பரவிய வதந்தி குறித்து நடிகை ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை குண்டு ஆர்த்தியும், அவரது கணவர் கணேஷும் விவாகரத்து செய்து கொண்டதாக வாட்ஸ்ஆப்பில் வதந்தி பரவியது. இந்நிலையில் இது குறித்து ஆர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
விவாகரத்து குறித்து அவர் கூறுகையில்,
பிரச்சனை
எனக்கும், கணேஷுக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து வசிக்கவில்லை. நான் எங்காவது சென்றால் உங்கள் கணவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டால் அது எப்படி எனக்கு தெரியும் என்பேன்.
விவாகரத்து
தற்போது விவாகரத்து தான் டிரெண்ட். அப்படி பார்த்தால் நாங்கள் டிரெண்டில் இருக்கிறோம்ல. புருஷன், பொண்டாட்டின்னா பிரச்சனை வரணும். இல்லை என்றால் நன்றாக இருக்காது.
பேச்சு
ஒரு புருஷன், பொண்டாட்டி பிரச்சனை இல்லாமல் வாழ்ந்தால் அவர்களை பற்றி யாரும் பேச மாட்டார்கள். பிரச்சனை வந்தால் அவர்களை பற்றியே பேசுவார்கள். இப்போது எங்களை பற்றி பேசுகிறார்கள்ல.
கோவில்
நானும், கணேஷும் சேர்ந்து சனிக்கிழமை கோவிலுக்கு சென்றோம். நாங்கள் ஜோடியாக சென்றதை யாரும் பார்க்கவில்லை. விவாகரத்து கொடுத்தால் அது சுதந்திரம் கொடுப்பது ஆகும். நான் கணேஷை ஆயுள் சிறையில் வைத்துள்ளேன்.