Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
எனக்கு எந்த பவரும் இல்லை...கதறி அழும் மதுமிதா
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நான்காவது வாரத்தின் நிறைவு பகுதியை நெருங்கி வருகிறது. நிகழ்ச்சியின் 25 ம் நாளான இன்று நாள் முழுவதும் விவாதம், சமாதானம் என்றே சென்றது.
இது நெருப்பு ஆற்றலுக்கான வாரம் என பிக்பாஸ் அறிவித்ததால், நெருப்பு காயின் வைத்திருக்கும் இசைவாணிக்கு அதிக பவர்களை கொடுக்கிறார். அவர் என்ன ரூல்ஸ் வேண்டுமானாலும் போடலாம். அவர் காயினை வைத்த பிறகு தான் சமைக்க வேண்டும், அவர் சொல்வதை தான் சமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல அதிகாரங்களை கொடுத்தார்.
ஈகோவாக உருவான பவர்
இதனால் யாருக்கு அதிக அதிகாரம் என்ற விவாதம் வீட்டிற்குள் நடந்து வருகிறது. இது மதுமிதா மற்றும் இசைவாணி இடையே மோதலை உருவாக்கி, ஈகோ பிரச்சனையை கிளப்பி உள்ளது. இசைவாணி அதிக அதிகாரத்துடன் நடப்பதை, சர்வாதிகாரி போக்குடன் நடப்பதாக இமான் அண்ணாச்சி நேருக்கு நேராக கூறினார்.
கண்ணீர் விட்ட இசைவாணி
இதனால் மனவருத்தம் அடைந்த இசைவாணி, உடைமாற்றும் அறைக்கு சென்று கதறி அழுகிறார். அவரை பிரியங்கா, சின்ன பொண்ணு, மதுமிதா ஆகியோர் சமாதானப்படுத்த முயல்கிறார்கள். தொடர்ந்து கார்டன் ஏரியாவில் அழும் இசைவாணியிடம், மதுமிதா, இருவரும் ஒன்றாக இணைந்து, பேசி அனைத்தையும் செய்வோம் என்கிறார்.
சமாதானப்படுத்தும் அண்ணாச்சி
அப்போது அங்கு வரும் இமான் அண்ணாச்சி, ராஜு ஆகியோர் இசைவாணியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள். அண்ணாச்சி தான் சொன்னதை விளக்கி சொல்ல முயல்கிறார். இருந்தாலும் அதை இசைவாணி ஏற்காமல் இருக்கிறார்.
எனக்கு பவரே இல்லை
அவர்களிடம் பேசி விட்டு வீட்டிற்குள் வரும் மதுமிதா, சிபி, ஐக்கி பெர்ரி, ராஜு ஆகியோரிடம் தனக்கு இந்த வீட்டில் எந்த பவரும் இல்லை. தான் எதற்காக கேப்டனாக இருக்கிறேன் என தெரியவில்லை. யாரை தூங்க வேண்டாம் என சொல்லும் வேலையை மட்டுமே நான் பார்க்கிறேன். நான் சொல்வதா யாரும் காது கொடுத்து கேட்பதில்லை. இந்த வீட்டில் தான் வேஸ்டாக இருப்பதாக கூறி கதறி அழுகிறார்.
சமாதானப்படுத்தும் நபர்கள்
மதுமிதாவை வீட்டில் உள்ள அனைவரும் சமாதானப்படுத்துகிறார்கள். உன்னை யாரும் அப்படி நினைக்கவில்லை. நீ ஏன் உன்னை தாழ்த்தி நினைத்துக் கொள்கிறாய் என சமாதானப்படுத்துகிறார்கள்.