twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் அப்பா விபச்சாரத்துக்கும் குடிக்கும் அதிகம் செலவு செய்வார்.. வனிதாவின் 3வது கணவர் மகன் திடுக்!

    |

    சென்னை: தன்னுடைய அப்பாவான பீட்டர் பால் பாலியல் தொழிலாளிகளுடன் அதிக தொடர்பு வைத்திருந்ததால் தனக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டதாக அவரது மகன் கூறியுள்ளார்.

    Recommended Video

    Vanitha சாயம் வெளுத்தது • கொந்தளிக்கும் ரசிகர்கள் • Vanitha Peter paul

    வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அவரது மூன்றாவது கணவரான பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

    பீட்டர் பால் தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக அவரது முதல் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். வனிதாவின் திருமணம் குறித்து தினமும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது,

    நீங்க அனுதாபப்படுறதால அவங்களுக்கு அவங்க புருஷன் கிடைக்கப்போறதில்ல.. பப்ளிக்கை விளாசும் வனிதா! நீங்க அனுதாபப்படுறதால அவங்களுக்கு அவங்க புருஷன் கிடைக்கப்போறதில்ல.. பப்ளிக்கை விளாசும் வனிதா!

    சட்டப்படி எதிர்கொள்வேன்

    சட்டப்படி எதிர்கொள்வேன்

    ஆனால் என்ன நடந்தாலும் பீட்டர் பால் தான் என்னுடைய கணவர், யாரு அனுதாபப்பட்டாலும் அவரது முதல் மனைவிக்கு அவர் கிடைக்கப் போவதில்லை. அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என வியாக்கியானம் பேசி வருகிறார் வனிதா.

    பல திடுக்கிடும் தகவல்

    பல திடுக்கிடும் தகவல்

    இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் தனது அப்பா குறித்து பல திடுக்கிடும் விஷயங்களை பேசியுள்ளார். தன்னுடைய அப்பா ஒன்றும் டீடோட்லர் இல்லை என்ற அவர் வனிதா சொல்வதில் எதிலும் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.

    சகோதரியாக நினைத்து

    சகோதரியாக நினைத்து

    தனது அப்பாவுடன் ஒரு நாள் மாலை வனிதாவின் வீட்டிற்கு சென்றேன், இரவு டின்னர் சாப்பிட்டோம் என்ற அவர் அவருடைய ஒரு சகோதரியாக நினைத்துதான் அவருடைய இளைய மகளுடன் சமீபத்தில் மெஸேஜ்களை பரிமாறிக் கொண்டதாகவும் கூறினார்.

    தன்னை அவமானப்படுத்த

    தன்னை அவமானப்படுத்த

    வனிதாவுடன் திருமணம் என வெளியான தகவல் மற்றும் அதுதொடர்பான அழைப்பிதழ் குறித்து தன்னுடைய அப்பாவிடம் கேட்டேன் அதற்கு அவரை அவமானப்படுத்த யாரோ ஒருவர் அழைப்பை அச்சிட்டதாகவும் அது போலியானது என்றும் கூறினார்.

    நகையெல்லாம் அடகு

    நகையெல்லாம் அடகு

    தனது தாயார் பணத்திற்காக ஒரு பிரச்சினையை உருவாக்குகிறார் என்று கூறுவதெல்லாம் பொய் என்ற அவர், தனது தாயார் ஒருபோதும் அப்படி எதுவும் கேட்கவில்லை என்று கூறினார். உண்மையில், பீட்டர் பால் என் தாயாரின் நகைகள் அனைத்தையும் அடகு வைத்திருக்கிறார், எனவே என்னுடைய பாட்டி ஐந்து லட்சம் ரூபாய் கேட்டார் என்றார் பீட்டர் பாலின் மகன்.

    விபச்சாரத்திற்கு செலவு

    விபச்சாரத்திற்கு செலவு

    அவர் மேலும் கூறுகையில், தனது தந்தை நன்றாக வேலை பார்ப்பார். ஆனால் ​​விபச்சாரத்திற்கு அவர் அதிகம் செலவு செய்வதாலும் நிறைய குடிக்கும் நேர்மையற்ற நபராக இருப்பதாலும் அவரை வெறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். வனிதாவுடனான தனது தந்தையின் திருமணச் செய்திகளைப் பற்றி கேள்விப்பட்டபோது, பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை.

    பல பெண்களுடன் தொடர்பு

    பல பெண்களுடன் தொடர்பு

    ​​அவரது விசுவாசமின்மை நீண்ட காலமாக நடந்து வருவதால் இது அவ்வளவு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றும் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் பீட்டர் பாலின் முதல் மனைவியின் மகன் கூறியிருக்கிறார். திருமண அழைப்பிதழ் குறித்து எங்களிடம் பொய்தான் சொன்னார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Peter Paul first wife son says he hates his father because he commits adultery and drinks a lot. He also says peter Paul lied to us about Marriage with Vanitha.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X