Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
யுடர்ன் ரிலீசாகட்டும்.. அப்புறம் ‘அவரை’ கொல்லப் போகிறேன்: மிரட்டும் சமந்தா
சமந்தாவின் யுடர்ன் படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாக இருக்கிறது.
சென்னை: யுடர்ன் பட இயக்குநர் பவன்குமாரை தான் மிகவும் வெறுப்பதாகவும், பட ரிலீசிற்காகத் தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமந்தா.
கடந்த 2016ம் ஆண்டு கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, பல விருதுகள் பெற்ற வெற்றிப்படம் யுடர்ன். திரில்லர் படமான இதனை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் பவன்குமார். இப்படத்தில் சமந்தா, ஆதி, நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கோ.தனஞ்ஜெயன் நிறுவனமான கிரியேட்டிவ் எண்டர்பிரைசிஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் வெளியீட்டுக்கான உரிமையை பெற்றுள்ளது. இப்படம் இம்மாதம் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று ரிலீசாக இருக்கிறது.
சமந்தாவின் ஆசை:
இந்நிலையில், சென்னையில் நேற்று யுடர்ன் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகை சமந்தா, "யுடர்ன் படத்தை கன்னடத்தில் பார்த்தபோதே, இதனை ரீமேக் செய்தால் நான் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்குத் தகுந்தாற்போல், இயக்குநர் பவன்குமாரும் என்னையே நாயகி கதாபாத்திரத்திற்கு அணுகினார்.
கேரக்டர்:
இப்படத்தில் ஜர்னலிஸ்டாக நடித்திருக்கிறேன். நிஜத்தில் என் கேரக்டரும், இப்பட கேரக்டரும் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் என்பதால் மிகவும் ஈடுபாட்டுடன் இப்படத்தில் நடித்தேன்" என்றார்.
சொதப்பல் காட்சிகள்:
அதனைத் தொடர்ந்து, பவன்குமார் பற்றி சமந்தா காரசாரமான டிவிட்கள் வெளியிடுவது பற்றியும், பதிலுக்கு அவரும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சமந்தாவின் சொதப்பல் காட்சிகளை வெளியிட்டு பழி வாங்குவது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.
ஜாலி பதில்:
அதனைக் கேட்டு சிரித்த சமந்தா, ‘ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்கிறோம். பட ரிலீசுக்காகத் தான் காத்திருக்கிறேன். பிறகு பாருங்கள் அவரைக் கொன்று விடுகிறேன்" என ஜாலியாக பதிலளித்தார்.