Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மேடையில் காதல் கதையை வெளிப்படையாக பகிர்ந்த மோகன்லால் மனைவி
கொச்சி : நடிகர் மோகன்லால் முதல் முறையாக இயக்கும் Barroz: The Guardian of D'Gama's Treasure படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் மம்முட்டி, ப்ருத்விராஜ், பிரியதர்ஷன் என மலையாள திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட போது மேடையில் பேசிய மோகன்லாலின் மனைவி சுசித்ரா, முதல் முறையாக வெளிப்படையாக தங்களின் காதல் கதையை தெரிவித்தார். அவர் பேசுகையில், அவர் நடித்த முதல் படமான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்தை பிறகு அவரை எனக்கு பிடிக்காது. அதில் அவர் ரவுடியாக நடித்திருந்ததால் அவரை வெறுத்தேன்.
முதல் படத்தை பார்த்து வெறுத்தேன்
அதற்கு பிறகு தொடர்ந்து நெகட்டிவ் வேடங்களிலேயே அவர் நடித்தார். இதனால் எனது வெறுப்பும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர் வேலையில் ரொம்ப பெர்ஃபெக்ட் என்பதால் அவரை வில்லனாகவே நான் பார்த்தேன். அவர் நடித்த 'என்டே மம்மட்டிகுட்டியம்மாக்கு' படத்தை பார்த்த பிறகு தான் அவரை பிடிக்க ஆரம்பித்தது.
காதல் மலர்ந்தது எப்போது
விரைவில் இருவரும் காதலிக்க துவங்கி, பிறகு திருமணம் செய்து கொண்டோம். மோகன்லால் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அதனால் எனக்கு பிடித்த டைரக்டராகவும் அவர் மாறுவார் என நம்புகிறேன்.
முதல் மேடை பேச்சு
கடந்த காலங்களில் எல்லா விழாக்களிலும் நான் பின் சீட்டில் இருந்தே பார்த்துள்ளேன். எனது மகன் பிரணவ் மோகன்லால் நடித்த முதல் படத்தின் விழாவில் தான் நான் முதன் முதலில் பேசினேன்.
டைரக்டராக மாறும் கணவர்
இன்று என் கணவரின் வாழ்க்கையில் முக்கியமான தருணம். அதில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பேசுகிறேன். ஒரு நடிகராக அவர் அனைத்து சாதனைகளையும் படைத்து விட்டார். இப்போது டைரக்டராக அடியெடுத்து வைத்துள்ளார். அதனால் நான் கண்டிப்பாக பேச வேண்டும் என்றே மேடை ஏறினேன் என்றார்.
பிரம்மாண்ட 3 டி படம்
மோகன்லால் இயக்கும் முதல் படத்தின் சூட்டிங் கொச்சியில் நேற்று துவங்கியது. பெரிய பட்ஜெட் 3 டி படமாக இது உருவாக்கப்பட உள்ளது. போர்ச்சுகல், இந்தியா, ஆப்பிரிக்காவில் நடப்பது போன்ற பெரிய செட் அமைக்கப்பட உள்ளது.