எனக்கு சிம்பு மீது க்ரஷ்.. வரப்போற கணவர் இப்படிதான் இருக்கனும்.. மனம் திறந்த ரஜினி பட நடிகை!
Recommended Video
சென்னை: தனக்கு நடிகர் சிம்பு மீது க்ரஷ் இருப்பதாக பிரபல நடிகை ஒருவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
பேராண்மை, அரவாண், பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை தன்ஷிகா. இவர் கபாலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார்.
பேராண்மை முன்னதாகவே தன்ஷிகா படங்களில் நடித்திருந்தாலும் அந்தப்படத்தில்தான் கவனிக்கப்பட்டார். இதேபோல் பரதேசி அரவான் பங்களிலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பிரேக் கிடைக்கவில்லை
கபாலியில் ரஜினிக்கு மகளாக அதிரடி காட்டியிருப்பார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் தன்ஷிகா. ஆனாலும் நல்ல ஒரு பிரேக் இதுவரை கிடைக்கவில்லை.

நான்கு மொழிகளிலும்
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார் தன்ஷிகா. தற்போது கிட்னா, யோகிடா, லாபம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு மீது க்ரஷ்
இந்தப் படங்கள் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை தன்ஷிகா தனக்கு நடிகர் சிம்பு மீது க்ரஷ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையுடையவர்
மேலும் தனக்கு வரப்போகும் கணவர் தன் மீது நம்பிக்கையுடையவராக இருக்க வேண்டும் என்றும் நடிகை தன்ஷிகா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தொடர் சர்ச்சைகள்
நடிகர் சிம்பு ஏற்கனவே பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார், தொடர்ந்து ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு தாமதமாக வருவது என பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











