Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
8 வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் முன்னாள் ஹீரோயின்.. அம்மா கேரக்டருக்கும் ரெடியாமே!
சென்னை: பிரபல முன்னாள் ஹீரோயின் எட்டு வருடத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
தமிழில், பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன் உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா.
மும்பையை சேர்ந்த இவர், ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
என்னது.. கஸ்தூரிக்கு பிக்பாஸ்க்கான சம்பளம் கொடுக்கலயா.. விஜய் டிவி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
ரிதேஷ் தேஷ்முக்
இந்தி நடிகரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு ஜெனிலியா நடிப்பதை நிறுத்தி விட்டார்.
திருமணத்துக்கு பிறகு
கடைசியாக இந்தியில் 2012 ஆம் ஆண்டு வெளியான, தேரே நால் லவ் ஹோ ஹயா என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் இப்போது அளித்துள்ள பேட்டியில் நடிப்பதற்கு மீண்டும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: திருமணத்துக்கு பிறகு கணவருடன் நேரத்தை செலவிட முடிவு செய்தேன். அதன்படி செயல்பட்டேன்.
முழுக் கவனமும்
பிறகு குழந்தைகளை கவனித்துக் கொண்டேன். வீட்டில் குழந்தைகள் என்ன செய்வார்களோ என்ற கவலைப்பட்டுக் கொண்டே ஷூட்டிங்கில் கவனம் செலுத்த முடியாது. அதனால் பட வாய்ப்புகளை ஏற்கவில்லை. நடிகை என்றால் என் முழுக் கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது குழந்தைகள் ஓரளவு வளர்ந்துவிட்டார்கள்.
அதிக வாய்ப்புகள்
அதனால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இப்போது அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. நான் பார்த்த டெல்லி கிரைம், ஆர்யா ஆகிய வெப்சீரிஸ்களில் பெண் நாயகிகளின் கேரக்டர் வலுவானதாகவும் அற்புதமாகவும் இருப்பதை உணர்ந்தேன். அது போன்ற கேரக்டர்கள் என்னை அதோடு இணைக்கின்றன.
மீண்டும் நடிப்பு
இத்தனை வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் நடிக்க வருகிறேன் என்றால், அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். ரசித்து அனுபவிக்கும் கேரக்டராக இருக்க வேண்டும். அம்மாவாக நடிக்க மாட்டேன், என் வயது கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. இவ்வாறு ஜெனிலியா கூறியுள்ளார்.
-
எப்போதும் சியர் லீடராக இருப்பேன்.. சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அதிதி
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!