Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
பெங்களூரு: தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கிக் கொடுக்கவில்லை என்று முன்னாள் ஹீரோயினும் எம்.பியுமான சுமலதா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சுமலதா.
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
இவர், கன்னடத்தில் நடித்தபோது நடிகர் அம்பரீஷை காதலித்து கடந்த 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
மண்டியா தொகுதி
தமிழில், திசைமாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்தவர் சுமலதா. இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருக்கிறார். அம்பரீஷ் மறைவுக்குப் பிறகு, அவருடைய மண்டியா தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார் சுமலதா.
பேட் மேனர்ஸ்
அவரை எதிர்த்து போட்டியிட்டது, கன்னட முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. சுமலதாவின் மகன் அபிஷேக், இப்போது பேட் மேனர்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இது அவருக்கு இரண்டாவது படம். இந்தப் படத்தை கே.எம் சுதீர் தயாரிக்கிறார்.
விவசாய அமைப்புகள்
துனியா சூரி இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், கைவிடப்பட்ட சர்க்கரை ஆலையில் நடந்து வந்தது. இங்கு படப்பிடிப்புகளுக்கு இதற்கு முன், அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் சில விவசாய அமைப்புகள், இங்கு படப்பிடிப்பு நடத்த நடிகை சுமலதா தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக புகார் கூறின.
அடிப்படையற்ற புகார்
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள சுமலதா, இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கு பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது தெரியாது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை.
உள்ளூர் பொருளாதாரம்
இதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. என் மீது புகார் தெரிவிப்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற படப்பிடிப்புகளால், உள்ளூர் பொருளாதாரம். உள்ளூர் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார்.