Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எனக்கு 3 பிரச்சனை இருக்கு: உண்மையை சொன்ன பிரபாஸ்
ஹைதராபாத்: எனக்கு 3 பிரச்சனை உள்ளது. அப்படி இருக்கும் போது நான் ஏன் இந்த துறையில் உள்ளேன் என்று யோசிப்பது உண்டு என பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் நடித்துள்ள சாஹோ மெகா பட்ஜெட் படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படத்தில் அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷ்ராஃப், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சிகளில் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபாஸ் பேட்டி ஒன்றில் தன்னை பற்றியும், திரையுலகம் பற்றியும் பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,
வந்தாள் மகாலட்சுமியே.. என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே.. பிக்பாஸ் வேக்அப் பாட்ட கவனிச்சீங்களா?
சினிமா
எனக்கு சோம்பல் உள்ளது. நான் கூச்ச சுபாவம் உள்ளவன், மக்களை சந்தித்து பேச முடியாது. எனக்கு இந்த 3 பிரச்சனைகள் இருப்பதால் நான் ஏன் இந்த துறைக்கு வந்தேன். இது சரியா, தவறா என்று சில சமயம் என்னை நானே கேட்டுக் கொள்வது உண்டு. அதிர்ஷ்டவசமாக பாகுபலி படம் உருவானது. தற்போது எனக்கு இந்த துறையில் இருப்பதை தவிர வேறு வழியில்லை.
அசவுகரியம்
நான் கூச்ச சுபாவம் உள்ளவனாக இருக்க விரும்பவில்லை. ஏனென்றால் சில சமயங்களில் அது அசவுகரியமாக உள்ளது. அந்த சுபாவத்தால் புதியவர்களை சந்திக்க நேரம் எடுக்கிறது. கூட்டத்தை பார்த்தால் அசவுகரியப்படாமல் இருக்க விரும்புகிறேன் ஆனால் முடியவில்லை.
கேமரா
கூச்ச சுபாவத்தால் என் நடிப்புத் திறன் பாதிக்கப்படவில்லை. என் முதல் படத்தில் இருந்தே நான் கேமராவுக்கு முன்பு சவுகரியமாக உணர்கிறேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நிறைய பேர் இருந்தால் எனக்கு அசவுகரியமாகிவிடும். பல டேக்குகள் போனாலும் நான் கவலைப்படுவேன் என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
சாஹோ
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள சாஹோ படம் தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ. 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஷ்ரத்தா கபூருக்கு ரூ. 7 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம்.
-
சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!