Don't Miss!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மழை நம் அனைவரையும் தற்காலிக அகதிகளாக மாற்றியிருக்கிறது - ஏ.ஆர்.ரகுமான்
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடு மற்றும் அவரது ஸ்டுடியோவிற்குள் வெள்ளம் புகுந்தது.
தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை சென்னை மக்களை மிகவும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை மக்களின் வீடுகளுக்குள் புகுந்த மழை, வெள்ளம் பிரபலங்களின் வீடுகளையும் விட்டு வைக்கவில்லை.
ஏற்கனவே நடிகர் சித்தார்த், நடிகை கனிகா ஆகியோர்களின் வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடு மற்றும் அவரது ஸ்டுடியோவிற்குள் நேற்று வெள்ளநீர் புகுந்தது.
Friends and Well wishers, thank you for your kind concerns. It's very difficult to see fellow Chenaiites and people...
Posted by A.R. Rahman on Thursday, December 3, 2015
இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இதுகுறித்து பின்வருமாறு கூறியிருக்கிறார் " என்னுடைய நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரின் அக்கறைகளுக்கும் நன்றி.
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்படுவதைக் காண மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
நம்மில் பலர் இந்த மழையால் தற்காலிக அகதிகளாகி மாறியிருக்கிறோம்.என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ஸ்டுடியோ குழுவினர் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வீடு மற்றும் ஸ்டுடியோவிற்குள் புகும் வெள்ள நீரை பம்ப் மூலமாக வெளியேற்றி வருகின்றனர்.
சென்னை சரியான வகையில் மீண்டும் புதுப்பிக்கப்படும் மற்றும் அதன் மூலமாக நாம் அனைவரும் எதிர்வரும் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கப்படுவோம் என்று நம்புகிறேன்.
இதனை நாம் சுலபமாக செய்திடும் வகையில் கடவுள் நமக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பார்".
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!