Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எம் பொண்ணு போதைக்கு அடிமையா?: நடிகை சார்மியின் தந்தை பேட்டி
ஹைதராபாத்: சார்மிக்கும், போதைப் பொருள் விஷயத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகைகள் சார்மி, முமைத் கான் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகை சேர்ந்த 15 பேருக்கு தெலுங்கானா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சார்மியின் தந்தை தீப் சிங் உப்பல் கூறியிருப்பதாவது,
சார்மி
என் மகளுக்கு இது போன்ற புகார்களை எதிர்கொள்ள நேரம் இல்லை. எனக்கு என் மகளை பற்றி நன்கு தெரியும். அவர் 13 வயதில் இருந்தே வேலை பார்த்து வருகிறார். தற்போதும் சினிமா துறையில் வெற்றிகரமானவராக உள்ளார்.
சினிமா
போதைப் பொருள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் என் மகளால் இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் வெற்றிகரமானவராக இருக்க முடியாது.
உழைப்பு
சார்மி தனது கடின உழைப்பால் தான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளார். அவர் வேலை பார்க்கத் துவங்கியதில் இருந்தே குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்.
கவலை
போதைப் பொருள் புகாரை கேட்டு என் மகள் இதயம் நொறுங்கிப் போயுள்ளார். புகார் கூறும் முன்பு யோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சார்மி தற்போது பைசா வசூல் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வளவு தான் என்றார் சிங்.