பிரபல நடிகருடன் கள்ளத் தொடர்பா?: வாரிசு நடிகை விளக்கம்
மும்பை: நடிகர் பர்ஹான் அக்தருடன் காதல் என்று வரும் கிசுகிசுக்களை கேட்டு சிரிப்பதாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் தனது மனைவி அதுனா பபானியை விவாகரத்து செய்துவிட்டார். அவர்கள் பிரிவதற்கு பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரே காரணம் என்று பாலிவுட்டில் பேசுகிறார்கள்.
ஷ்ரத்தாவுக்கும், பர்ஹானுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளத்தொடர்பு அதுனாவுக்கு தெரிந்து பிரச்சனையாகிவிட்டது என்று கூறப்படுகிறது.

விவாகரத்து
பர்ஹானை பிரிந்து அதுனா தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பை நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.

ஷ்ரத்தா
ஷ்ரத்தா இரவு நேரத்தில் பர்ஹான் வீட்டிற்கு சென்றுவிட்டு விடியும் போது தான் தனது வீட்டிற்கு செல்கிறார். இதை யாரும் பார்த்துவிடாமல் இருக்க பர்ஹான் வீட்டிற்கு சென்றதும் தனது காரை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுகிறாராம்.

அப்பா
பர்ஹான் வீட்டில் லிவ் இன் முறைப்படி வாழச் சென்ற ஷ்ரத்தாவை அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூர் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டாராம்.

சிரிப்பு
பர்ஹானுடன் தொடர்பு என்று வரும் கிசுகிசுக்களை பார்த்து சிரிப்பதாக ஷ்ரத்தா கபூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு கூற பாலிவுட்காரர்களோ வேறு விதமாக பேசுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











