twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜீத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்: விஜய் அம்மா ஷோபா

    By Siva
    |

    சென்னை: அஜீத் குமாரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் இளைய தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர்.

    அஜீத் குமாரும், விஜய்யும் எலியும், பூனையுமாக இருந்தார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவர் தங்களது படத்தில் நக்கல் அடித்து வந்தனர். இதனால் அவர்களின் ரசிகர்களும் அதே பாணியில் சண்டை போட்டு வந்தனர்.

    இந்நிலையில் பக்குவமடைந்த அஜீத்தும், விஜய்யும் தற்போது நண்பர்களாகிவிட்டனர். அண்மையில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு,

    ராஜாவின் பார்வையிலே

    ராஜாவின் பார்வையிலே

    விஜய்யும், அஜீத்தும் சேர்ந்து நடித்த படம் ராஜாவின் பார்வையிலே. அப்படத்தில் நடிக்கையில் இருவரும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தனர். அப்படத்தின் ஷூட்டிங்கின்போது ஷோபா தினமும் விஜய்க்கு மட்டுமின்றி அஜீத்துக்கும் சேர்த்து சமைத்து உணவு அனுப்பியுள்ளார்.

    நன்றி மறக்காத 'தல'

    நன்றி மறக்காத 'தல'

    விஜய் அம்மா தனக்கும் சேர்த்து சாப்பாடு அனுப்பி வைத்ததை அஜீத் குமார் இன்றும் மறக்கவில்லை. எப்பொழுதெல்லாம் ஷோபாவை பார்க்கிறாரோ அப்போதெல்லாம் அஜீத் தனது நன்றியைத் தெரிவிப்பார்.

    அஜீத் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    அஜீத் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    அஜீத் குமாரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஷோபா தெரிவித்துள்ளார்.

    English summary
    Vijay's mother Shobha Chandrasekhar told in a recent interview that she likes Ajith a lot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X