“இது தான் நான். இது தான் எனது 'ஆடை'யின் கதை".. அமலாபால் வெளியிட்ட கெத்தான டிவீட்!
தனது மனநிலையை வெளிப்படுத்தும் வகையிலான டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை அமலா பால்.
Recommended Video
சென்னை: எவ்வளவு பெரிய தடை வந்தாலும் போராடி வெல்வேன் என நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
ஆடை படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானதில் இருந்தே சர்ச்சையில் சிக்கி வருகிறார் அமலா பால். டீசர் வெளியானதில் இருந்து அவரது நிர்வாணக் காட்சிகள் பற்றிய சமூக வலைதளங்களில் ஒரு ஆராய்ச்சியே நடந்தது.
விஜய் சேதுபதியின் படத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார் அமலா பால். நிர்வாணமாக நடித்ததாலேயே தன்னை நீக்கியதாக அவர் கூறினார்.
அமலாபால் டிவீட்:
இந்நிலையில் தனது மனவலிமையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலான டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் அமலா பால். எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும் போராடி வெல்வேன் என அதில் அவர் கூறியுள்ளார்.

இது தான் நான்:
டிவீட்டில் அவர், "நான் சண்டை போடுவேன். வாழ்வேன். பெரியதோ, சிறியதோ தடைகள் வரட்டும். நான் ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை பொடிப்பொடியாக்கி, ஊதித் தள்ளுவேன். எனது வலிமையை தான் நான் நம்புகிறேன். சுதந்திரமும், சந்தோஷமும் தான் முக்கியது. உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் நீங்கள் தோற்க மாட்டீர்கள். இது தான் நான். இது தான் எனது 'ஆடை'யின் கதை", என குறிப்பிட்டுள்ளார்.

ஆடை ரிலீஸ்:
அமலா பால் நடித்த ஆடை திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீசாகிறத. இதையொட்டியே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அமலா பாலுக்கு தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது, தனது மனவலிமையை மற்றவர்களுக்கு உணர்த்தவே இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

முன்னாள் கணவர்:
மேலும், அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. இதனால் கூட அவர் இந்த டிவீட்டை பதிவிட்டுள்ளார் என்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











